Skip to main content

தமிழகத்தில் 38 பேருக்கு கரோனா... சுகாதாரத்துறை தகவல் 

Published on 27/03/2020 | Edited on 27/03/2020

உலக அளவில் 190 நாடுகளில் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ள கரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் நூற்றுக்கணக்கானோரை பாதித்துள்ளது.  

இந்நிலையில் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 35 பேருக்கு கரோனா பாதிப்பு இருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கையானது மேலும் 3 அதிகரித்து 38 ஆக உயர்ந்துள்ளது.

 

 Corona for 38 people in Tamil Nadu ...


சென்னை சேர்ந்த 73 வயது மூதாட்டிக்கும், சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 39 வயது வாலிபருக்கும், சேலத்தைச் சேர்ந்த 61 வயது முதியவர் ஒருவருக்கும் கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மூதாட்டிக்கு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையிலும், 39 வயது நபருக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலும், 61 வயது முதியவருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்