Skip to main content

கரோனாவைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக தென் மாவட்டங்களில் நேரில் ஆய்வுசெய்யும் முதல்வர்!

Published on 03/08/2020 | Edited on 03/08/2020

 

jk

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிக அளவு இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். குறிப்பாக மதுரை, விருதுநகர் போன்ற தென் மாவட்டங்களில் கரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால், அந்த மாவட்டங்களில் தினசரி பாதிப்புகள் 200ஐ கடந்து வருகின்றன. இந்நிலையில், இந்த பாதிப்புகள் தொடர்பாக தென் தமிழகத்தில் வரும் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்