Skip to main content

கோவிலில் வைத்து பெண் வன்கொடுமை.. உறவினர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்த குற்றவாளிகள்..!

Published on 08/01/2021 | Edited on 08/01/2021

 

Nagappatinam woman at temple two arrested


வயிற்றுப் பிழைப்பிற்காக கூலி வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய பெண்ணை, வாயைப் பொத்தி கோவிலுக்குள் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் நாகையை கலங்கடிக்க செய்திருக்கிறது.
 


நாகை அடுத்துள்ள நாகூரைச் சேர்ந்தவர் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 40 வயதான இவர், கனவனை இழந்து, வறுமையின் பிடியில் சிக்கி, குடும்பத்தைக் காப்பாற்ற கட்டடப் பணியில் சித்தாள் வேலைக்குச் சென்றுவருகிறார்.

 

இந்நிலையில் நேற்று இரவு 8 மணிவரை கலவை சட்டியை சுமந்துவிட்டு, லேசான மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்தபடி வீட்டுக்கு நடந்தே சென்றிருக்கிறர். அவரைப் பின் தொடர்ந்த, கஞ்சா போதையில் இருந்த, கருங்காலிகள் இரண்டு பேர், அந்த பெண்ணை வாயைபொத்தி, ரோட்டோரமாக இருந்த பிள்ளையார் கோவிலுக்குள் தூக்கிச் சென்று கொடூரமாக வன்கொடுமை செய்துள்ளனர்.

 

“பொழுது முழுவதும் சிமெண்ட் கலவை சட்டியையும், செங்கல்லையும், சுமந்து உடல் சோர்ந்து நடக்கவே முடியாத நிலையிலும் பஸ்ஸுக்கு கொடுக்கும் பயணக் கட்டணத்தை, பிள்ளைகளுக்கு பயண்படுத்தலாமே என்று உடல் வலியையும் பொருட்படுத்தாமல் நடந்து சென்றிருக்கிறார். அந்த பகுதி எப்போதுமே மக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும். ஆனால், நேற்று இரவு லேசான மழையால் மக்கள் நடமாட்டம் குறைந்திருக்கிறது. இதனை சாதகமாக்கிக்கொண்டு அந்த அப்பாவி பெண்ணை தூக்கிச் சென்று சிதைத்துள்ளனர். இதில் சம்மந்தபட்ட ஆனந்தராஜ், அற்புதராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அதே சமயம் ‘இது குறித்து புகாரோ, வெளியில் யாரிடமோ சொன்னால் குடும்பத்துடன் காலி செய்துவிடுவோம்’ என மிரட்டியிருக்கிறார்கள். கொடூரத்தையும் செய்துவிட்டு வீட்டிற்கே சென்று மிரட்டும் அளவிற்கு குற்றவாளிகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது” என்கிறார்கள் வெளிப்பாளையத்தைச் சேர்ந்த சமூக ஆர்வளர்கள். 

 

"வெளிப்பாளையம் காவல் நிலையம், நாகை நகரத்தின் மையத்தில் இருக்கிறது. காவல் நிலையத்தைச் சுற்றி கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையாகி வருகின்றன. இது காவல் நிலையத்திற்கு முழுமையாக தெரியும். காவல் நிலையம் அருகிலேயே நீதிமன்றங்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகமும் இருக்கின்றன, அதே வேளையில் குற்றவாளிகளின் கூடாரங்களாகவும் அந்தப் பகுதி இருப்பதுதான் வேதனை" என்கிறார் அரசியல் பிரமுகர் ஒருவர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேட்புமனு தாக்கல்; நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் செயலால் பரபரப்பு

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Nagapattinam is in a frenzy due to the action of Naam Tamilar Party candidate

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கார்த்திகா தனது கட்சியினருடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய வருகை தந்தார்.

அப்போது தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஜானி டாம் வர்கீஸிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதன் பின்னர் ஆட்சியர் வழங்கிய உறுதிமொழி படிவத்தை வாங்கிப் பார்த்த வேட்பாளர் கார்த்திகா, பிறகு அதனைப் படிக்கத் துவங்கினார்.

அப்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர், ‘கார்த்திகா எனும் நான். மக்களவையில் காலியாக உள்ள இட ஒதுக்கீட்டை நிரப்புவதற்கு வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நான், சட்ட விதிகளுக்கு இணங்க நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பு அமைப்பின்பால் உண்மையான கட்டுப்பாடும், உண்மையான நம்பிக்கையும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் முழு முதல் ஆட்சியையும் ஒருமைப்பாட்டையும் நிலை நிறுத்துவேன் என்றும் எனக் கூறிய அவர், ஒரு கணம் நிறுத்தி, தலைவர் பிரபாகரன் மீது சூளுரைத்து உளமார உறுதி கூறுகிறேன் என ஆட்சியருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

Nagapattinam is in a frenzy due to the action of Naam Tamilar Party candidate

அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, ‘இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்க தலைவரின் பெயரை கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டது சரியா என கேள்வி எழுப்பினர். உறுதிமொழி படிவத்தில் ஆண்டவர் என எழுதி இருந்தது. அதனைத் தவிர்த்து 13 கோடி தமிழர்களின் இறைவன் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டேன்’ என விளக்கம் கூறிய அவர், நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்று மக்களவைக்கு சென்று அங்கு தேசியத் தலைவர் பிரபாகரன் மீது உறுதிமொழி எடுக்கும் மெயின் பிக்சர் காட்சி அங்குதான் உள்ளது என ஆவேசத்துடன் கூறினார்.

இந்திய அரசியலமைப்பு சாசனப்படி வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள், அதனை முறையாகப் பின்பற்றாமல் தங்களுக்கு ஏற்றவாறு அதனை மாற்றிக் கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொள்வதால் இவர்களுக்கான வேட்புமனு ஏற்கப்படுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? என்கிற பேச்சு நாகை நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்களிடையே எழுந்துள்ளது.

Next Story

மீன்வளப் பல்கலைக்கழகம்; ஜெயலலிதாவின் பெயரை நிராகரித்த குடியரசுத்தலைவர்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
President rejects Jayalalitha name for Fisheries University

நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டார்.

நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியின் போது நாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகு நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று  சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஓப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 4 ஆண்டுக்கும் மேல் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கிடப்பில் போடப்பட்ட 10 மசோதாக்களுடன் ஜெயலலிதா பெயர்மாற்றம் தொடர்பான மசோதவையும் திருப்பி அனுப்பியிருந்தார். இதையடுத்து தமிழக அரசு மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் வைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்த நிலையில் நாகப்பட்டினம் மீன்வளப் பல்கலைகழகத்திற்கு ஜெயலலிதா பெயர் மாற்றம் தொடர்பான பரிந்துரையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரிப்பதாக அறிவித்துள்ளார்.