Published on 11/12/2018 | Edited on 11/12/2018

சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
ஐந்து மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நான்கு இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.
வாக்கு எண்ணிக்கையில் 8.50 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் டிஆஎஸ் கட்சி 25 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி 34 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சத்தீஸ்கரில் காங்கிரஸ் 9 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மிசோரத்தில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.