Skip to main content

பாஜகவுக்கு 5 தொகுதி காங்கிரசுக்கு 10 தொகுதி ; அடிமைக்கட்சி அதிமுகவா? திமுகவா? பாஜகவை வெறுப்பேற்றிய அமைச்சர்கள்

Published on 23/02/2019 | Edited on 23/02/2019

"அதிமுக அமைப்பது ராஜ்ய கூட்டணி , திமுக அமைப்பது பூஜ்ய கூட்டணி" என்று நாகப்பட்டினத்தில் நடந்த அதிமுக அலுவலகத்திறப்பு விழா கூட்டத்தில் பேசினார்கள் அதிமுக அமைச்சர்கள்.

 

அதிமுக அலுவலகம் நாகப்பட்டினம் ஈசிஆர் சாலையில் புதிதாக கட்டி ஏற்கனவே திறந்துவிட்டனர். ஆனால் திறப்புவிழா என்கிற பெயரில், விடியற்காலையில் யாகம் வளர்த்து திறப்புவிழா செய்தனர், அதே வேலையில் அங்கு ஆலோசனை கூட்டத்தையும் நடத்திவிட்டனர். ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட முழுவதிலிருந்தும் வழக்கம் போல் கூட்டம் திரட்டுவதுபோல் வேன்கள், கார்கள், மூலம் தொண்டர்களை கொண்டு வந்து குவிந்திருந்தனர்.  வந்தவர்களுக்கு ஆட்டுக்கறி பிரியாணியும், பாயாவும்  விருந்தாக அளிக்கப்பட்டது.

 

admk

 

கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயகுமார் "லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 40 தொகுதியிலும் வெற்றி கிடைக்கும், அதற்கு நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதிமுக கூட்டணியில் பாமக வந்ததும் திமுக தலைவர் ஸ்டாலினால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதிமுக அமைப்பது தான் ராஜ்யகூட்டணி, திமுக அமைப்பது பூஜ்ய கூட்டணி. நாங்கள் பாஜகவிற்கு அடிமை கட்சி என்று திமுகவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் இந்த நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக விற்கு வெறும் 5 தொகுதிகள் தான். ஆனால் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கோ 10 தொகுதிகள். இதிலிருந்தே தெரியவில்லையா யார் அடிமை கட்சி என்று. பொங்கலுக்கு ஆயிரம் தற்போது 60 லட்சம் பேருக்கு இரண்டாயிரம் என்று அறிவித்ததுமே திமுகவினர் அலறிக்கொண்டு தேர்தலை சந்திக்க பயந்துநிற்கின்றனர்." என ஆக்ரோசமாக பேசி முடித்தார்.

 

admk

 

நாகை மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் பேசுகையில்" தமிழக அரசு சார்பில் தேசிய விநாயகம் பிள்ளை, பெரும்பிடுகை முத்தரையர், இரட்டைமலை சீனிவாசன், பழனிச்சாமி கவுண்டர், சர்ஏடி பன்னீர்செல்வம், உள்ளிட்டவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் எனவும், கர்னல் ஜான் பென்னிகுயிக், காளிங்கராயர், அழகுமுத்துக்கோன், மா. பொ. சிவஞானம், ஆதித்தனார் , ஆகியோர் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்திருப்பது எங்களுக்கு வெற்றியை தறும்". என்றார்.

 

 

"இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து  வலியுறுத்தி வரும் நிலையில் அதற்கான எந்த முன்மொழிவும் செய்யவில்லையே என விவசாயிகள் மத்தியில் இருக்கும் குமுறலையும் அங்கு கேட்க முடிந்தது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.