Skip to main content

அறிவிக்கக் கூடாது என்ற பழனிசாமி; தேர்தல் முடிந்த சூட்டோடு அரசாணையை வெளியிட்ட அரசு

Published on 03/03/2023 | Edited on 03/03/2023

 

Issue decree to supply 1000 units of electricity to weavers

 

சுடச்சுட என்பார்களே அதுபோல திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை மிக வேகமாக நடைமுறைப்படுத்தியுள்ளது.

 

கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக பல்வேறு அறிவிப்புகளை கொடுத்தது. அதில் ஒன்றுதான் விசைத்தறிகளுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம். தற்போது வழங்கப்பட்டு வரும் 750 யூனிட் இலவச மின்சாரம் உயர்த்தப்பட்டு 1000 யூனிட்டாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக அரசு பதவி ஏற்ற பிறகு தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. அதில் இந்த இலவச மின்சார அறிவிப்பும் தொடர்ந்து அமல்படுத்தும் பணி நடந்து வந்தது. இதற்கிடையே தான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு வந்தது. இதனால் விசைத்தறிகளுக்கு கூடுதலாக வழங்கப்படும் இலவச மின்சார அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இதற்கு மிக முக்கியமான காரணம் அதிமுக தரப்பில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக திமுக அரசு எந்த அறிவிப்பும் கொடுக்கக் கூடாது எனத் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டதுதான். 

 

அரசின் அறிவிப்பாணையை நிறுத்தக் கோரி அந்த கடிதம் எழுதியவர் அதிமுக எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு வந்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விசைத்தறியாளர்கள் அமைப்பு நிர்வாகிகளை அழைத்து பேசி உண்மை நிலையை புரிய வைத்தார். விசைத்தறிகளுக்கு உறுதியாக தேர்தல் முடிந்ததும் கூடுதல் இலவச மின்சார அறிவிப்பு வரும் என்று நம்பிக்கையை கொடுத்தார். அதன்படியே அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி பொறுப்பில் இருந்த வீரப்பன்சத்திரம் பகுதியில் வாக்குப் பதிவில் திமுக கூட்டணி மிக அதிகமான வாக்குகளை பெற்றது. அம்மக்கள் அமைச்சரின் உத்தரவை ஏற்று, அங்கு விசைத்தறி நெசவாளர்கள் திமுக கூட்டணிக்கு அதிக வாக்குகளை செலுத்தினார்கள். இந்த நிலையில் திமுக கூட்டணியான காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் வெற்றி பெற்று மூன்றாம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதோடு முதல்வரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

 

இது இத்துடன் நிற்காமல் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் விதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி முதல்வரிடம் இந்த கோரிக்கையை அவர் பார்வைக்கு கொண்டு செல்ல, மூன்றாம் தேதி மாலையே விசைத்தறியாளர்களுக்கு 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதோடு, விசைத்தறிகளுக்கு 1000 யூனிட்டுக்கு மேல் யூனிட் ஒன்றுக்கு 70 காசுகள் மட்டுமே உயர்த்த வேண்டும் என்ற நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் விதமாக 1001 யூனிட்டிலிருந்து 1500 யூனிட்டுகள் வரை அதிமுக எடப்பாடி அரசு உயர்த்திய அந்த மின்சாரத்தை யூனிட் ஒன்றுக்கு 35 காசுகள் குறைத்து, அதேபோல் 1500 யூனிட்டிற்கு மேல் 70 காசுகள் குறைத்தும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

 

தேர்தல் பணியில் ஈடுபட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தனது துறையின் கீழ் வரும் அந்த அறிவிப்பை மிக வேகமாக உடனடியாக செயல்படுத்தியிருக்கிறார். இது தமிழ்நாட்டில் உள்ள 10 லட்சம் விசைத்தறியாளர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அவர்கள் வாழ்வில் நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. துறை அமைச்சருக்கும் முதல்வருக்கும் நன்றியை தெரிவித்து பாராட்டுகிறார்கள் விசைத்தறியாளர்கள் சங்கத்தின் அமைப்புகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.