Skip to main content

கணவரின் உடலைத் தள்ளுவண்டியில் இடுகாட்டுக்கு எடுத்துச் சென்ற மனைவி!

Published on 20/07/2020 | Edited on 20/07/2020

 

fd

 

கரோனா பீதி காரணமாக யாரும் உதவாத காரணத்தால் இறந்த கணவரின் உடலை அவரின் மனைவி தள்ளுவண்டியில் இடுகாட்டுக்கு கொண்டு சென்ற அவலம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியில் உள்ள அதானியைச் சேர்ந்தவர் சாதஷிவ் ஹிட்டி. இவர் அப்பகுதியில் உள்ள மார்க்கெட் அருகில் செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகின்றார். இவர் கடந்த 17ஆம் தேதி தனது மனைவி, மகன்கள் இருவருடன் உறவினர் ஒருவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். இரவில் தனி அறையில் படுத்து உறங்கிய அவர் அதிகாலையில் நீண்ட நேரம் ஆகியும் எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரின் மனைவி அவரை எழுப்பிப் பார்த்துள்ளார். ஆனால் அவர் தூங்கி நிலையிலேயே மரணமடைந்துள்ளார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உறவினர்களைக் கூப்பிடவே, அவர்கள் அனைவரும் கரோனா பயத்தால் பிணத்தின் அருகில் வரவே பயந்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். ஆம்புலன்ஸ் டிரைவர்களை கூப்பிட்டாலும் அவர்களும் கரோனா பயத்தால் வர மறுத்துள்ளனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்த அவர் அருகில் இருந்த தள்ளுவண்டியில் கணவரின் பிணத்தை ஏற்றிக்கொண்டு இடுகாட்டிற்குச் சென்று அடக்கம் செய்துள்ளார். இந்தச் சம்பவம் அந்த மாநிலத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்