Skip to main content

சண்டையிடும் பெற்றோருக்கு தற்கொலை மூலம் பாடம் சொன்ன மகள்!

Published on 15/05/2020 | Edited on 15/05/2020

 

 Pudukkottai family dispute issue

 

தன் வீட்டில் விபரம் தெரிந்த குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதையும் மறந்து, பல பெற்றோர்கள் அடிக்கடி சண்டைப்போட்டுக் கொள்வதால் பல குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த குழந்தைகள் மற்றவர்களிடம் இருந்தும் விலகி இருக்கிறார்கள். குழந்தைகளின் மனநிலையை அறியாத பெற்றோர்களால் அந்த குழந்தைகளில் வாழ்க்கை நாசமாகிறது என்பதை உணர வேண்டும். அப்படியான ஒரு பெற்றோருக்கு தனது மரணத்தின் மூலம் ஒரு பாடத்தை உணர்த்தி இருக்கிறாள் ஒரு கல்லூரி மாணவி.
 


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ளது கோவிலூா் சம்பாமனை கிராமம். விவசாய கூலித் தொழிலாளர்கள் நிறைந்த கிராமம் அது. இந்த ஊரை சேர்ந்தவர் பழனிவேல் இவரது மகள் சுமித்திரா (20) புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மைக்ரோ பயாலஜி படித்து வருகிறார். இவருடன் ஒரு சகோதரியும், 2 சகோதரர்களும் உள்ளனர்.

 

 


பழனிவேலும் அவர் மனைவியும் தினசரி வீட்டில் சண்டையிட்டுக் கொள்வதை அருகில் இருக்கும் இந்த குழந்தைகள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். மனதளவில் பாதிக்கப்பட்டு வெளியே சொல்ல முடியாமல் உள்ளுக்குள்ளேயே அழுது கொண்டிருக்கிறார்கள். ஆனால் சற்று துணிச்சலான சுமித்திரா.. நீங்கள் அடிக்கடி சண்டைப் போடுவதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எங்களை கேவலமாக பார்க்கிறார்கள். தம்பி, தங்கைகளும் அழுகிறார்கள் இனிமேல் சண்டை போடாதீர்கள் என்று பல முறை சொல்லியும் யாரும் கேட்கவில்லை.

அதன் பலன்.. இன்று காலையும் வழக்கம்போல சண்டை நடந்த நிலையில் மீண்டும் பெற்றோரிடம் சொல்லி பார்த்த சுமித்திராவுக்கு நல்ல தீர்வு கிடைக்கவில்லை, சண்டை தொடர்ந்தது. அதன் பிறகு சட்டென்று ஓடினார் அவர் பின்னாலேயே அரவது தம்பியும், அக்காவும் போகாதே என்று அழுது கொண்டே ஓட.. வேகமாக ஓடிய சுமித்திரா சற்று தூரத்தில் இருந்த கிணற்றில் குதித்துவிட்டார். பின்னால் ஓடிய தம்பி அழுது கொண்டே வந்து விபரம் சொல்ல, ஆலங்குடி தீயணைப்பு வாகனம் வந்து நீண்ட நேரம் போராடி சுமித்திராவின் சடலத்தை தான் மீட்க முடிந்தது.

 

nakkheeran app




மீட்கப்பட்ட சடலம் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து ஆலங்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

திருந்தாத பெற்றோரை திருத்த நினைத்த கல்லூரி மாணவி தனது உயிரை பணயமாக வைத்து விட்டாள். பெற்றோரை திருத்த மரணம் மட்டுமே தீர்வு இல்லை என்பதை அந்த நேரத்தில் அந்த மகளுக்கு சொல்லி, அவரை மரணத்திலிருந்து காப்பாற்ற கூட அருகில் யாரும் இல்லை என்பதுதான் வேதனை.  

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.