Skip to main content

அமைச்சர் மா. சுப்பிரமணியன் நாளை மறுநாள் டெல்லி பயணம்

Published on 06/07/2021 | Edited on 06/07/2021

 

gh

 

தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் நாளை மறுநாள் (08.07.2021) டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரோனா இரண்டாம் அலை தாக்கத்தால் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக தமிழ்நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாகியுள்ளது. ஆனால், மத்திய அரசு தரும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை தமிழ்நாட்டிற்கு போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு தமிழ்நாடு தரப்பிலிருந்து தொடர்ந்து வைக்கப்படுகிறது. தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக சில நாட்கள் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றது. இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு அதிகப்படியான எண்ணிக்கையில் தடுப்பூசி கொடுக்க வலியுறுத்தி நாளை மறுநாள் சுகாதாரத்துறை அமைச்சர் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்