Skip to main content

தங்கதமிழ்செல்வனை கட்சியில் சேர்க்க கூடாது! தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் தீர்மானம்!!

Published on 27/06/2019 | Edited on 27/06/2019

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் கொள்கைபரப்பு செயலாளராகவும், டிடிவியின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த தங்கதமிழ்செல்வனும், டிடிவி க்கும் இடையே  ஏற்பட்ட  திடீர் மோதலால் தங்கதமிழ்செல்வனை கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து  டிடிவி நீங்கினார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. 

 Don't add  the thangatamilselvan to the party! Theni district AIADMK executives


இதனால் பாதிக்கப்பட்ட தங்கதமிழ்செல்வனும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒரு கட்சியே இல்லை. கூடாரம் எல்லாம்  காலியாகி வருகிறது. அந்த  அளவுக்கு  டிடிவி சரவ அதிகார போக்கை கடைபிடித்து வருகிறார் தற்பொழுது தான் எந்த கட்சியிலும் சேரப்போவதில்லை கொஞ்ச நாள் ஓய்வெடுக்க இருக்கிறேன் என மீடியாக்கள் மத்தியில் பரபரப்பாக பேசியும் வருகிறார்.

ஒபிஎஸ்க்கு எதிராக தங்கதமிழ்செல்வனை மீண்டும் கட்சியில் சேர்த்து ஒபிஎஸ்க்கு செக் வைக்கும் முயற்சியில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் எடப்பாடி மகன் பிதின்குமார் மூலமும் மறைமுக பேச்சும் ஒருபுரம் நடந்து வருகிறது. ஆனால் ஒபிஎஸ் மற்றும் அவருடைய  ஆதரவாளர்கள்  எல்லாம் ஒட்டு மொத்தமாகவே தங்கதமிழ்செல்வனை (டிடிஎஸ்) மீண்டும் கட்சியில் சேர்க்க கூடாது என போர்க் கொடி தூக்கி வருகிறார்கள். 

 

 Don't add  the thangatamilselvan to the party! Theni district AIADMK executives


இந்நிலையில் தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான்  தலைமையிலும். அதுபோல் தேனி மாவட்ட அதிமுக துணை செயலாளர் முருக்கோடை ராமர் முன்னிலையிலும் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பயணியர் விடுதியில் திடீரென தேனி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகரம்,ஒன்றியம், பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் அணி செயலாளர்கள் என 60க்கு மேற்பட்டோரை அழைத்து ரகசிய கூட்டம் போட்டிருக்கிறார்கள். இக்கூட்டத்தில் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் தான் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் ஏகமனதாகவே  தங்கதமிழ்ச்செல்வனை மீண்டும் கட்சியில் சேர்த்தால் கோஷ்டி பூசலை உருவாக்குவார். அதோடு சாதி அரசியலையும் முன்னிலைபடுத்தி நமக்குள் கருத்து வேறுபாடுகளையும் கொண்டு வந்து விடுவார்.  கட்சி  வளர்ச்சியும் பாதிக்கும் அப்படிபட்ட  தங்க தமிழ்ச்செல்வனை கட்சியில் சேர்க்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 Don't add  the thangatamilselvan to the party! Theni district AIADMK executives


இதற்கு எம்.பி . ரவீந்திரநாத் குமார் மற்றும் கம்பம் எம்எல்ஏ ஜக்கையனும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இப்படி மாவட்டத்தில் எம்.பி. முதல் பேரூர் பொறுப்பாளர்கள் என ஒட்டுமொத்த பொறுப்பாளர்களும் இந்த தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்து போட்டு மாவட்ட செயலாளர் சையது கான் மற்றும் மாவட்ட துணை செயலாளர் முறுக்கோடை ராமர் ஆகியோரிடம் கொடுத்து இருக்கிறார்கள். 

அதை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்களுடன் சென்னை சென்று தலைமை கழகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணைமுதல்வரான ஒபிஎஸ் மற்றும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும்,முதல்வருமான எடப்பாடியை  சந்தித்து தீர்மானம்  நகலை கொடுக்க இருக்கிறார்கள். அதன் மூலம் தங்கதமிழ்செல்வனும் மீண்டும் கட்சியில் சேர வாய்ப்பு  இல்லை. இருந்தாலும் அந்த  தீர்மானத்தை எடப்பாடி தரப்பு  ஏற்றுக் கொள்ளுமா? என்பதை பொருந்திருந்து தான்  பார்க்க முடியும்.

 

 

 

 

 

  

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.