குடியுரிமை சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. இந்த நிலையில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மசோதாவை திரும்பப் பெறக் கோரியும், மசோதாவை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசு மற்றும் உள்துறை அமைச்சரை கண்டித்தும் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களோடு சேர்ந்து மாணவர்களும் போராட்டங்களை துவங்கியுள்ளனர்.

Advertisment

citizenship amendment bill 2019 rajya sabha admk mp ranipet jamadh

இந்நிலையில் ராணிப்பேட்டை அனைத்து ஜமாத் காப்பாளர்கள் பொறுப்பில் இருந்து அதிமுக எம்.பி முகமது ஜான் நீக்கப்பட்டார். மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததால் ஜமாத் உறுப்பினர்கள் இத்தகைய முடிவை எடுத்துள்ளனர்.

Advertisment