Skip to main content

விஷம் கொடுத்தும் புருஷன் சாகல... காதலனிடம் ஃபோனில் சொன்ன மனைவி... விசாரணையில் அதிர்ந்த போலீசார்... 

Published on 27/07/2020 | Edited on 27/07/2020

 

Police

 

சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த கார் டிரைவர், தரணிதரன். இவருக்கு பவானி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். கணவர் தரணிதரன் கடந்த 22ஆம் தேதி கடன் தொல்லைக் காரணமாக தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக பவானி பூந்தமல்லி போலீசார் புகார் செய்தார். 

 

இந்தப் புகாரையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், தரணிதரன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தரணிதரன், கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

 

இதையடுத்து போலீசார் ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர். இதனால் பவானி மீது சந்தேகம் அடைந்த போலீசார், பவானியிடம் விசாரணை நடத்தினர். போலீசாரின் பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பவானி முன்னுக்குப்பின் முரணாகப் பதில் கூறினார். பவானியின் செல்போன் அழைப்புகளைச் சோதனை செய்தபோது, அதில் ஒரு நபர் மட்டும் அடிக்கடி பேசி இருப்பதும், தரணிதரன் இறப்பதற்கு முன்பு அந்த நபர் பவானி வீட்டுக்கு வந்து சென்றதும் தெரியவந்தது.

 

பவானியிடம் தீவிரமாக விசாரித்தபோது, தரணிதரனின் நண்பரான தினேசும் டிரைவராக உள்ளார். இருவரும் அடிக்கடி ஒன்றாக மது அருந்துவார்கள். நாளடைவில் தரணிதரன் வீட்டிற்கு தினேஷ் வந்து செல்லும் அளவுக்கு நட்பு நீடித்தது. தினேஷ் ஏற்கனவே திருமணமாகி மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்ததால், பவானி மீது கண் வைத்துள்ளார் தினேஷ். இதனால் தரணிதரன் வீட்டுக்கு தினேஷ் அடிக்கடி வந்து செல்வார். அப்போது தினேசுக்கும், பவானிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, பின்னர் முறை தவறிய உறவாக மலர்ந்துள்ளது.  

 

தங்களது சந்திப்புகளுக்கு தரணிதரன் இடையூறாக இருப்பதாக பவானியும், தினேஷும், அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர். பூச்சி மருந்தை உணவில் கலந்து கொடுக்க முடிவு செய்தனர். அதன்படி தரணிதரனுக்கு சாப்பாட்டில் பூச்சி மருந்தைக் கலந்து கொடுத்துள்ளார், பவானி. வழக்கம்போல உணவு அருந்திவிட்டு தூங்கிய தரணிதரன், மறுநாள் காலையில் எழுந்து வாந்தி எடுத்துவிட்டு, காஃபி குடித்துவிட்டு மீண்டும் தூங்கியுள்ளார். 

 

உணவில் விஷம் கலந்து கொடுத்தும் தரணிதரன் சாகவில்லை என்றதும் ஆத்திரம் அடைந்த பவானி, காதலன் தினேசை போனில் தொடர்புகொண்டு, விஷம் கொடுத்தும் புருஷன் சாகல, எப்போதும் போலத்தான் இருக்கிறார். உடனே நீங்கள் வாருங்கள் என அழைத்துள்ளார். காதலன் வருவதற்குள் குழந்தைகளை தாத்தா வீட்டிற்கு அனுப்பி வைத்த பவானி, காதலன் வந்ததும், காதலனுடன் சேர்ந்து கணவரைத் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். 

 

படுத்துக்கிடந்த தரணிதரனின் கழுத்தைத் துப்பட்டாவால் நெரித்துக் கொலை செய்தார். தரணிதரன் துடிதுடித்துப் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரே தற்கொலை செய்து கொண்டதுபோல் துப்பட்டாவின் இரண்டு பகுதிகளையும் தரணிதரன் கையில் சுற்றிவிட்டு தினேஷ் அங்கிருந்து சென்றுவிட்டார்.

 

பின்னர் கொலையை மறைப்பதற்காக கடன் தொல்லையால் தனது கணவர் தனக்குத் தானே துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி தற்கொலை செய்துகொண்டது போல் பவானி நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது. 

 

கைதான இருவரும் போலீசார் முன்னிலையில் தரணிதரனை கொலை செய்தது எப்படி? என நடித்துக் காட்டினார்கள். அதனை போலீசார் வீடியோ பதிவு செய்தனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.