Skip to main content

தேசிய மருத்துவ ஆணையம் போலி மருத்துவர்களை உருவாக்கும் - 24 மணி நேரம் வேலை நிறுத்தம்;ஆர்ப்பாட்டம்

Published on 31/07/2019 | Edited on 31/07/2019


 

    தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்படுவதை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. எதிர்ப்பை காட்ட மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு. ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.   அதே போல புதுக்கோட்டையில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் சங்க அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மருத்துவர்கள் கூறும் போது.. 


     பாராளுமன்றத்தில் இந்திய மருத்துவ கவுன்சிலைக் கலைத்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையம் என்ற அமைப்பை நாடாளும் அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தில் எங்களுடைய சில கோரிக்கைகளை தேசிய அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனாலும் இந்திய மருத்துவ கவுன்சில் கலைக்கப்பட்டுள்ளதை இந்திய மருத்துவ சங்கம் கண்டிக்கிறது. முக்கியமாக இந்த புதிய சட்டத்தில் உள்ள சில சரத்துக்களை முழுமையாக எதிர்க்கிறது.

 

i


    முதலாவதாக தனியார் மருத்துவ கல்லூரிகள் 50மூஇடங்களுக்கு தாங்களே கட்டண நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்ற பிரிவு ஏழை மாணவர்களுக்கு எதிரானது.  மேலும் இறுதி ஆண்டு தேர்வு  மதிப்பெண் அடிப்படையில் மேல் படிப்பு இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்த அறிவிப்பில் எத்தனை முறை மாணவர்கள் மீண்டும் முயற்சி செய்யலாம் என்பது தெளிவாக இல்லை.


    பிரிவு 32இல் “சமுதாய மருத்துவ உதவி அளிப்பவர்” என்ற பிரிவில் நவீன மருத்துவ பிரிவினை சேர்ந்த அனைவரும் (சிகிச்சை தர தகுதி அல்லாதோர்) மருத்துவ சிகிச்சை அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவு நாடு முழுவதும் போலி மருத்துவர்களையும் அரை வேக்காடு மருத்துவர்களையும் உருவாக்கும். இதனால் பாதிக்கப்படப்போவது அப்பாவி பொதுமக்கள் தான்.


    இப்படிப்பட்ட மசோதாவை எதிர்த்து இந்திய மருத்துவ சங்கம் தேசிய அளவில் 24 மணி நேரம் மாபெரும் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தம் காலை 6 மணி தொடங்கி (31.07.2019) மறுநாள் (01.08.2019) காலை 6 மணி வரை நடைபெறும்.


    அத்தியாவசிய மருத்துவ சேவைகள் தவிர மற்ற அனைத்து சேவைகளும்  நிறுத்தப்படும். அவசர மருத்துவ சேவைகள் பிரசவம் மற்றும் உள் நோயாளிகள் பிரிவுகள் இயங்கும். இதனை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளை வளாகத்தில் ஏராளமான தனியார் மருத்துவர்கள் தங்களது கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்தனர். இதில் ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
            
        
 

சார்ந்த செய்திகள்

Next Story

மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடவு; சிவகாசி மருத்துவர்கள் நல்கிய உடலுழைப்பு!

Published on 11/11/2023 | Edited on 11/11/2023

 

Doctors planting saplings in the Miyawaki method

 

இந்த உலகம் எதனால் யாரால் வாழ்கிறது என்றால், தனக்கென வாழாது பிறருக்கென வாழும் ஒரு சிலரால்தான் என மூதோர் கூறியுள்ளனர். தனக்கென வாழாமல் பிறருக்கென வாழ்தலே பிறப்பின் இன்பம் என்பதை அவ்வப்போது யாரோ செய்யும் சேவைகளின் மூலம் பார்த்திருப்போம். சிவகாசியிலும் அப்படியொரு சேவையில் பல மருத்துவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். ஆனால், அது மருத்துவ சேவையல்ல. சேற்றிலும் சகதியிலும் இறங்கி இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக உடலுழைப்பை நல்கிய சேவை அது.  

 

சிவகாசி பெரியகுளம் கண்மாயின் வடமேற்கு கரையில், கழிவுநீர் தேக்கக்குட்டை கரையில், மியாவாக்கி முறையில் சுமார் ஆயிரம் மரக்கன்றுகள் நடுவது, சிவகாசி மருத்துவர்கள் அனைவரது பங்களிப்போடு நடந்தது. அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை என எப்போதும் பரபரப்பாக இயங்கும் மருத்துவர்கள், ஆர்வத்துடன் மரக்கன்றுகளை  நடவு செய்து வியப்பில் ஆழ்த்தினர்.   

 

Doctors planting saplings in the Miyawaki method

 

இச்சேவையில் டாக்டர்களான சுப்புராஜ், ரகுநாதன், கதிரவன், பாலசுப்பிரமணியன், சோலைக்குமார், ரத்தினம், சண்முகராஜ், ராஜேஷ் தர்க்கர், மணிகண்டன், பரத், சுதா மற்றும் பல பெண் மருத்துவர்கள் முனைப்புடன் ஈடுபட்டனர்.  பொதுவாக, இதுபோன்ற நிகழ்வுகளின்போது போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். சிவகாசி மருத்துவர்களோ, பெரிய அளவில் பணியாளர்களே இல்லாமல் தாங்களே பணியாளர்களாக மாறி செயல்பட்டனர். நமது சமுதாயத்தில் சமூக சேவையின் அவசியம் பலவழிகளிலும் வலியுறுத்தப்படுகிறது. 

 

மியாவாக்கி: நகரங்களில் காலியாக இருக்கும் பகுதிகளில் அல்லது வீடுகளின் பின்புறங்களில் உள்ளூர் மரங்களையும் அவற்றின் விதைகளையும் கொண்டு குறுங்காடுகளை உருவாக்குவதே மியாவாக்கி முறையாகும். குறைந்த அளவுள்ள இடத்தில் அதிக மரங்களை நடுவதன் மூலம், சூரிய ஒளியைத் தேடி அவை உயரமாக வளரும் என்பதே இதன் அடிப்படை ஆகும்.

 

 

Next Story

அரசு மருத்துவமனையில் அலட்சியம்; உயிருடன் இருப்பவரை இறந்ததாக கூறிய மருத்துவர்கள்

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

Negligence in Erode Government Hospital

 

ஈரோடு மாவட்டம் சிவகிரி தலையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் வயது 75. டிவி மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பத்மினி.இவர்களுக்கு இரண்டு மகன் உள்ள நிலையில் மனைவி பத்மினி, மகன் வீட்டில் இருந்து வருகிறார். அவ்வப்போது உடல் நிலை பாதிக்கப்பட்டு வரும் ராஜசேகருக்கு, கடந்த 12 ஆம் தேதி மீண்டும் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 

 

இதையடுத்து உறவினர்கள் ராஜசேகரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக ராஜசேகரை மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஈரோடு தலைமை மருத்துவமனையில் ராஜசேகரை பிரிசோதனை செய்த மருத்துவர்கள் முதலில் அவரை ஐ.சி.யூவில் சிகிச்சைக்காக அட்மிட் செய்து சிகிச்சை பார்த்து வந்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன் தினம்(14.10.2023) மருத்துவமனை தரப்பில் இருந்து அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு ராஜசேகர் இறந்து விட்டதாகவும், அவரது உடல் பிணவறையில் இருக்கும் என்றும் கூறி உள்ளனர். மேலும் அதனை உறவினர்களிடம் தெரிவிக்கும் படியும் கூறி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை காவல்துறையினர் சிவகிரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்பு காவல்துறை மூலம் உறவினர்களுக்கு இது குறித்து தெரிவித்த போது அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ராஜசேகரன் உடலைப் பெற அமரர் ஊர்தி எடுத்துக்க கொண்டு நேற்று(15.10.2023) அரசு தலைமை மருத்துவமனையின் பிணஅறைக்கு வந்தனர். அப்போது பிணவறையில் சென்று பார்த்த பொழுது ராஜசேகர் பெயரில் எந்த உடலும் வரவில்லை என்றும் கூறியுள்ளனர். அதன் பின் மருத்துவமனை நிர்வாகித்திடம் கேட்டபோது, ராஜசேகர் உயிருடன் இருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் யாராவது தெரியாமல் கூறி இருப்பார்கள் என்றும் அசால்ட்டாக கூறியுள்ளனர்.

 

இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் எப்படி இது போன்று கூறலாம் என்று முதலில் வாக்குவாதம் செய்தனர். பின்னர் ராஜசேகருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையைப் பார்த்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர். அரசு மருத்துவமனையை நம்பி ஏழை எளிய மக்கள் சிகிச்சைக்காக வரும் நிலையில், இது போன்று ஒரு சில மருத்துவர்கள் செய்கின்ற சம்பவங்கள், பொது மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். உயிருடன் சிகிச்சை பெற்று வருபவரை இறந்து விட்டதாக கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.