Skip to main content

அருணகிரிநாதர் நினைவு மண்டப அடிக்கல் நாட்டு விழா- தனித்தனியாக வந்து அடிக்கல் நாட்டிய அரசியல் தலைவர்கள்!

Published on 08/09/2019 | Edited on 08/09/2019

கி.பி 15- ஆம் நூற்றாண்டில் திருவெங்கட்டர்- முத்தமையின் தம்பதியரின் மகனாக பிறந்தார் அருணகிரிநாதர். செல்லமாக தன் சகோதரியால் வளர்க்கப்பட்டவர், இளம் வயதில் பெண் பித்தராக இருந்துள்ளார், திருமணம் செய்த மனைவி இருக்கும்போதே இன்னும் பல பெண்களை தேடி, நாடி சென்றுள்ளார். ஒருக்கட்டத்தில் அவர் விரும்பிய பெண்கள் ஒதுக்கி, கட்டிய மனைவியும் ஒதுக்க தன் சகோதரியையே தவறாக நினைக்க, அதில் மனம் வெதும்பி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கோபுரத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக்கொள்ள குதித்ததாகவும், அப்போது அருணகிரிநாதரை கீழே விழுந்து இறக்காமல் காப்பாற்றினார் கடவுள் முருகன் என்கிறது வரலாறு.

Arunagirinath Memorial Foundation Foundation - Political leaders who came and laid the groundwork individually


அதன்பின் அவர் முருகபெருமானை நாயகனாக வைத்து பல நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதி, பாடியுள்ளார். தமிழகத்தில் அறுபடை வீடுகளிலும் இவரது பாடல் ஒளிக்கிறது. வாய் மணக்க திருப்புகழ் பாடுவோம் எனச்சொல்லப்படும் திருப்புகழ் என்கிற நூலை எழுதியதும் அருணகிரிநாதர். இவரது ஊர், பிறப்பு, வளர்ப்பு பற்றி பல்வேறு சந்தேகங்கள் இருந்தாலும், பெரும்பாலானவர்கள் அவர் திருவண்ணாமலையை சேர்ந்தவர் என ஒப்புக்கொள்கின்றனர். தமிழகம், இலங்கையில் அருணகிரிநாதருக்கு விழா எடுத்தாலும், அவர் பிறந்த ஊராக ஒப்புக்கொண்ட திருவண்ணாமலையில் அவருக்கென ஒரு மணிமண்டபம் இல்லாமல் இத்தனை ஆண்டுகள் இருந்தது.

இந்நிலையில், அருளாளர் அருணகிரிநாதர் மணிமண்டப அறக்கட்டளை என்கிற தனி அமைப்பு ஒன்று அருணகிரிநாதர்க்கு மணிமண்டபம் கட்ட முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வேறு அமைப்புகளிடம் நிதி திரட்டியுள்ளது. அதோடு, தமிழகரசின் இந்து சமய அறநிலையத்துறையினரிடமும் அனுமதி பெற்றுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா செப்டம்பர் 8ந்தேதி திருவண்ணாமலை நகரில் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன், அதிமுக பிரமுர்களுடன் வந்து அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு அடிக்கல் நாட்டினார்.

Arunagirinath Memorial Foundation Foundation - Political leaders who came and laid the groundwork individually


அதிமுகவினர் அந்த இடத்தில் இருந்து சென்ற நேரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வந்து அடிக்கல் நாட்டப்படும் இடத்தில் செங்கல் எடுத்து வைத்து வணங்கினார். அவர் சென்ற சிறிது நேரத்தில் திருவண்ணாமலை தொகுதி எம்.பியும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளருமான அண்ணாதுரை, அதே இடத்திற்கு வந்து அவர் ஒரு செங்கல் எடுத்து வைத்தார். ஒரு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. இதில் கூட அரசியல் பார்த்து தனித்தனியாக வந்து செங்கல் எடுத்து தந்து அடிக்கல் நாட்டியது கேலிக்குறியதாக பார்க்கப்படுகிறது. அதிலும் திமுக மா.செ வேலு தனியாகவும், எம்.பி தனியாகவும் வந்தது கேள்வியை எழுப்பியுள்ளது.





 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.