Skip to main content

''ஊடரங்கில் செல்ஃபோனில் மூழ்கிவிடாதீர்கள்...'' வீடுதேடி புத்தகம் கொடுக்கும் செல்ஃபோன் கடைக்காரர்!  

Published on 29/05/2021 | Edited on 29/05/2021

 

'' Do not immerse yourself in the cell phone in the media ... '' Cell phone shopkeeper who gives books to search the house

 

கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பலரும் பயனுள்ள வேலைகளை செய்து வந்தாலும் இளைஞர்கள், மாணவர்கள் செல்ஃபோன்களில் மூழ்கிக் கிடக்கின்றனர். கேம்ஸ்கள் அவர்களை கட்டிப் போட்டு வைத்துள்ளது. இப்படி செல்ஃபோன்களில் மூழ்கியுள்ள இளைஞர்களை மீட்பதே பெரிய கடினமான செயலாக கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

 

இந்நிலையில்தான் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் செல்ஃபோன் கடை நடத்தி வரும் செம்பாளூர் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சதீஷ்குமார் (31). தனது கிராம இளைஞர்கள் மாணவர்கள் செல்ஃபோனில் மூழ்கி வாழ்க்கையை வீணாக்கிவிடக் கூடாது என்பதற்காக வீடு வீடாக சென்று பொது அறிவு, அரசியல், வரலாறு, போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், இலக்கியம், நாவல், சிறுகதைகள் என பல்வேறு வகையான புத்தகங்களை கொடுத்து ஊரடங்கு காலத்தில் நிறைய படியுங்கள் என்று ஊக்கப்படுத்தி வருகிறார்.

 

'' Do not immerse yourself in the cell phone in the media ... '' Cell phone shopkeeper who gives books to search the house

 

இதுகுறித்து சதீஷ்குமார் நம்மிடம் கூறும்போது, ''நான் கல்லூரியில் படிக்கும் போதே புத்தகஙகள் மீது அதிக ஆசை உண்டு. நிறைய புத்தகங்கள் வாங்கி படித்தேன். அந்த புத்தகங்களை வீட்டிலேயே வைத்திருந்தேன். சென்னை போனால் நிறைய புத்தகங்கள் வாங்கி வருவேன். இப்படி வாங்கி வந்த புத்தங்களை எங்கள் வீட்டு மாடியில் "செம்மொழி வாசிப்பகம்" என்ற பெயரில் தனி நூலகமாக அமைத்தேன். புத்தகம் வாசிப்பதில் ஆர்வமுள்ள பலர் என் நூலகத்திற்கு வந்தார்கள். நிறைய புத்தம் படித்தார்கள் பல இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் கேட்டார்கள் வாங்கி வைத்திருக்கிறேன். இதையறிந்த சில நண்பர்களும் போட்டித் தேரவுகளுக்கான புத்தகங்கள் வாங்கித்தர முன்வந்துள்ளனர்.

 

தற்போது கரோனா பரவலை தடுக்க அரசு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் பலர் செல்ஃபோன்களில் மூழ்கி கேம்ஸ் விளையாடி நேரத்தையும் வீணடிக்கிறார்கள். மேலும் பலர் உறவுகள், பசியை கூட மறந்து விளையாடுகிறார்கள். இவர்களை செல்ஃபோன்களில் இருந்து மீட்க வீடு வீடாகச் சென்று புத்தகங்களை கொடுத்து படிக்கச் சொல்கிறேன். ஆர்வமாக புத்தகங்களை வாங்கி படிக்கிறார்கள். அடுத்து கரோனா ஊரடங்கு முடிந்த பிறகு படித்த இளைஞர்களுக்கு உள்ளூர் இளைஞர்களை வைத்தே போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளையும் நடத்த திட்டமிட்டுள்ளேன். மேலும் மாணவர் சேர்க்கை இல்லாத அரசுப் பள்ளிகளை மீட்க இளைஞர்கள் பொதுமக்களிடம் பேசிவருகிறேன்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கையில் புத்தகங்கள் தவழட்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Let the books creep in the hand says Chief Minister MK Stalin

மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய நாடுகளின் சபையான யுனெஸ்கோ சார்பில் உலக புத்தக தினம் ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உலக புத்தக தின வாழ்த்துச் செய்தியை தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “புதிய உலகத்திற்கான திறவுகோல், அறிவின் ஊற்று, கல்விக்கான அடித்தளம், சிந்தனைக்கான தூண்டுகோல், மாற்றத்திற்கான கருவி, மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை. அதனால் புத்தகங்களை வாசியுங்கள், நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள். புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும், நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன். கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2017 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக பொறுப்பேற்றதிலிருந்தும் 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகும் தன்னைச் சந்திக்க வருபவர்கள், பூங்கொத்துகள், பொன்னாடைகளைத் தவிர்த்து அன்பின் பரிமாற்றத்திற்கு அடையாளமாக புத்தகங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி தன்னைச் சந்திக்க வந்த பலரும் வழங்கிய ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நூலகங்களுக்கும், புத்தகங்கள் கோரிக் கடிதம் அளித்தவர்களுக்கும், அமைப்புகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

தேர்தலுக்குப் பிறகு ஷாக் கொடுக்க இருக்கும் சிம்கார்டு நிறுவனங்கள்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
SIM card companies to give a shock after the election

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் முடிந்த கையோடு செல்போன் நிறுவனங்களின் கட்டணங்கள் உயர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெளியான தகவலின் அடிப்படையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் செல்போன் கட்டண உயர்வு 15 சதவீதத்திலிருந்து 17 சதவீதம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏர்டெல், வோடபோன், ஜியோ உள்ளிட்ட அனைத்து நிறுவன கட்டணங்களும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.

ரூபாய் 208 ஆக உள்ள பார்த்தி ஏர்டெலின் ஒரு பயனருக்கான சராசரி வருவாய் 2027 இறுதியில் ரூபாய் 286 என உயரும் என கூறப்படுகிறது. கட்டணம் உயர்த்தப்படுவதன் மூலம் பார்த்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு பல மடங்கு வருவாய் கிடைக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இறுதியாக கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் செல்போன் கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.