Skip to main content

90 அடி உயரத்திலிருந்து விழுந்த என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளி உயிரிழப்பு!  பா.ம.கவினர் முற்றுகை!

Published on 26/11/2019 | Edited on 26/11/2019

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெரியகாப்பான் குளம்  கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல் என்பவரின் மகன்  செல்வகுமார்(24). இவர் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள அனல் மின் நிலையத்தில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக கடந்த 6 மாதமாக பணிபுரிந்து வருகிறார்.  
 

திருமணம் ஆகாத இவர் வழக்கம் போல் நேற்று பாய்லர் பிரிவில் சுமார் 90 மீட்டர் உயரத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த போது  எதிர்பாராத விதமாக 90 மீட்டர் உயரத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார். உடனடியாக சக தொழிலாளர்கள் செல்வகுமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நெய்வேலி என்எல்சி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

neyveli nlc india limited plant incident


ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்ததாக கூறியுள்ளனர். இது குறித்து நெய்வேலி டவுன்ஷிப் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் செல்வக்குமார் இறப்பை அறிந்த உறவினர்கள் மற்றும் ஊர் கிராம மக்கள் என சுமார் 500- க்கும் மேற்பட்டோர் என்.எல்.சி புதிய அனல் மின் நிலையம் முன்பு முற்றுகையிட்டனர். 

 

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நெய்வேலி டிஎஸ்பி லோகநாதன் தலைமையிலான காவல்துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இறநத குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும், குடும்பத்தில் ஒருவருக்கு என்.எல்.சியில் நிரந்தர வேலை வழங்க கோரியும்  கோரிக்கை வைத்தனர். 
 

பின்னர் செல்வகுமார் இறப்பை பற்றி செய்தி அறிந்த பா.ம.க மாநில துணை பொதுச்செயலாளர் அசோக்குமார், மாவட்ட செயலாளர்கள் சன்.முத்துகிருஷ்ணன், கார்த்திக்கேயன், ஆறுமுகம் உள்ளிட்ட பா.ம.க நிர்வாகிகள் என்.எல்.சி அதிகாரியிடம் உயிரிழந்த குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், பாட்டாளி மக்கள் கட்சியினர் சுமார் 300- க்கும் மேற்பட்டோர் என்.எல்.சி இந்தியா நிறுவனத்தை முற்றுகையிட்டு, கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

neyveli nlc india limited plant incident


மேலும் இறந்த செல்வகுமாரின் குடும்பத்திற்கு வேலை வழங்க வேண்டும் என்றும், குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் நடத்திய போராட்டத்தில், நெய்வேலி காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில் அமைந்துள்ள குழுவினர் பாட்டாளி மக்கள் கட்சியுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
 

காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை ஈடுபட்டதன் பேரில் கலைந்து சென்ற பாட்டாளி மக்கள் கட்சியினர் செல்வகுமார் மரணத்திற்கு நீதி வழங்கும் வரை என்எல்சி நிறுவனத்தைக் கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இரண்டு நாட்களாக இறந்த தொழிலாளியின் சடலத்தை வாங்காமல் போராட்டம் நடைபெறுவதால் என்.எல்.சியில் பதற்றம் நீடிக்கிறது.




 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.