Skip to main content

'பேருந்துகளை இயக்கி அதிமுகவின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும்'- தொமுச வலியுறுத்தல்

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
'Drive the buses and defeat admk's strategy' - Thomusa insists

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படாததால் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தை அறிவித்துள்ளன. இதனால் இன்று இரவு 12 மணி முதல் படிப்படியாக பேருந்துகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவசங்கர், ''பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 19,000 பேருந்துகள் இயக்கப்படும். கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 5 முன்பதிவு மையங்கள் செயல்படும். பொங்கல் முடிந்து ஊருக்கு வருவோருக்கு ஜனவரி 16 முதல் 18 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தர்மபுரம், கோயம்பேடு, கிளம்பாக்கம் உள்ளிட்ட 11 இடங்களில் முன்பதிவு மையங்கள் செயல்படும். அரசு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் சுமுகமாக இயக்க நடவடிக்கை எடுக்கும். எதை செய்ய முடியும்; எதை செய்வது சிரமம் என்பதை தொழிற்சங்கங்களுக்கு சொல்லியிருக்கிறோம்.

கடந்த அதிமுக ஆட்சியில் அவர்களால் செய்ய முடியாததை இப்போது அதிமுக தொழிற்சங்கங்கள் செய்ய சொல்வதும், எடப்பாடி பழனிசாமி சொல்வதும் வேடிக்கையான ஒன்று, விந்தையான ஒன்று. நாங்கள் செய்ய முடியாது என்று சொல்லவில்லை. நிதிநிலை சீரான பிறகுதான் செய்ய முடியும் என்று சொல்லியிருக்கிறோம். அவர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தம் பொதுமக்களுக்கு இடையூறு செய்வதற்காகத்தான். அரசியல் உள்நோக்கம் கொண்டது. தேர்தல் வருகின்ற நேரத்தில் இதை செய்தால் மக்களுக்கு கோபம் வரும் என்ற எண்ணத்தில் செய்கிறார்கள். ஆனால் பொதுமக்கள் இதை அறிவார்கள். அவர்களை இடைஞ்சல் செய்வோர் மீதுதான் அவர்களுக்கு கோபம் வரும்'' என்றார்.

'Drive the buses and defeat admk's strategy' - Thomusa insists

அதேநேரம் சென்னையில் திருவான்மியூர் பணிமனையில் பேருந்து நிறுத்தம் தொடங்கியதாக பெயர்ப்பலகையில் அறிவிக்கப்பட்டு பல இடங்களில் பேருந்து நிறுத்தம் அமலாகி வருகிறது.

இந்தநிலையில் அதிமுகவின் அரசியல் சூழ்ச்சியை முறியடிக்க தொ.மு.சவினர் பேருந்துகளை வழக்கம் போல இயக்க வேண்டும் என தொ.மு.ச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி அறிக்கையின் மூலம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான அறிக்கையில் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக திமுக அரசு தீர்த்து வருகிறது. மற்ற பிரச்சனைகளை அரசு தீர்க்கும் என்ற வாக்குறுதியை ஏற்று வழக்கம் போல் பேருந்துகளை இயக்க வேண்டும். முதல்வரின் நல்லாட்சிக்கு களங்கம் விளைவிக்க முயலும் அதிமுக தொழிற்சங்க நடவடிக்கைகளை முறியடிக்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை தீர்க்க தொ.மு.ச துணை நிற்கும்' என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.