Skip to main content

கடலூர் - பள்ளி வேன் விபத்து

Published on 22/08/2017 | Edited on 22/08/2017
கடலூர் - பள்ளி வேன் விபத்து 

நெய்வேலியில் பள்ளி வேன் மரத்தில் மோதி விபத்து, 13 மாணவிகள் காயமடைந்தனர். 

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் குண்டான்குளம் பகுதியில் என்.எல்.சி அரசுப்பள்ளி மாணவிகளை அழைத்துச்சென்ற தனியார் வேன்  சாலையில் உள்ள தடுப்புகட்டையின் மீது ஏறி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இத்த விபத்தில் வேனில் இருந்த 13 மாணவிகள் காயமடைந்து நெய்வேலி என்.எல்.சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

- சுந்தரபாண்டியன்

சார்ந்த செய்திகள்