Skip to main content

மக்களை நோக்கி மாநகர காவல்... நெல்லை மாநகரின் 'காப்பான்'

Published on 20/09/2019 | Edited on 20/09/2019

ஒரு புறம் மாணவர்களிடம் கலந்துரையாடல்... மறுபுறம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் சிறப்பு முகாம்...இன்னொரு பக்கம் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு சாதுர்யமாக தீர்வு... என பன்முகம் காட்டும் வித்தகராக இருக்கிறார் சரவணன் - நெல்லை டி.சி.

சென்னையில் இருந்து நெல்லைக்கு மாறுதலாகி வந்த 3 மாதத்திலேயே தனது சிறப்பான பணியின் மூலம் மக்களை கவர்ந்துவிட்டார். "மக்களை நோக்கி மாநகர காவல்" என்ற புதுமையான திட்டத்தை இவர் அறிமுகம் செய்திருக்கிறார்.

 

nellai police

 

இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு வார இறுதியிலும் ஏதாவது ஒரு பகுதியை தேர்வு செய்து அந்தந்த காவல் நிலையை அதிகாரிகள், காவல் ஆளினர்கள் மக்களுடன் சந்திப்பு நடத்த வேண்டும். அந்த பகுதியில் உள்ள பிரச்சனைகள், அவற்று தீர்வு காண்பது குறித்து அப்போது ஆலோசிக்கப்படுகிறது. சாலை விதிகளை பின்பற்றுவது குறித்தும், குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

அதேபோல், ஒவ்வொரு பள்ளிக்கூடங்களுக்கும் சென்று மாணவர்கள் மத்தியில் உரையாடும் துணைஆணையர் சரவணன், மாணவர்களுக்கு தனது முகவரி எழுதிய அஞ்சல் அட்டை கொடுத்திருக்கிறார். உங்கள் கண்ணுக்கு தவறாக தெரிகின்ற எந்த விஷயங்களையும் எழுதி அனுப்பலாம் என்றிருக்கிறார். அதுமட்டுமின்றி பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதில் காட்டும் அக்கறையும் மெச்சும்படி இருக்கிறது.

 

nellai police


அதேபோல், இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத் தரும் வகையில், நெல்லையில் சிறப்பு முகாமையும் நடத்தி அனைவருடைய பாராட்டை பெற்றார். 200சிசி பைக்கில் சாகசம் செய்த இளைஞர்கள் 11 பேரை பிடித்து, பாளையங்கோட்டை ஐகிரவுன்ட் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, எலும்பு முறிவால் பாதிக்கப்பட்டு படுத்துக்கிடக்கும் நோயாளிகளின் அவஸ்தையை கண்கூடாக பார்க்கவைத்தார்.

 

nellai police

 

"ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக் வைத்திருப்பவனுக்கு அபாரதம் செலுத்துவது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. கை, கால் உடைஞ்சா எப்படியெல்லாம் கஷ்டப் படுவோம்னு அவங்களுக்கு புரிய வச்சோம். அவங்களும் புரிஞ்சுகிட்டாங்க..."இவ்வாறு மாற்றி யோசிப்பதன் மூலம் இளைஞர்களை நல்வழிப்படுத்திட முடியும் என்ற ஆத்ம திருப்தி அவருக்கு கிடைத்திருக்கிறது.

ஒருபுறம் சமூக பணிக்கு காட்டும் முக்கியத்துவத்தை போன்று, நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி கொலை வழக்கில் துப்பு துலக்கி குற்றவாளியை பிடித்ததிலும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பலரை குண்டர் சட்டத்தில் சிறையில் தள்ளியது, நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழா, விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் ஆகியவற்றை பிரச்சனையின்றி முடித்து வைத்ததில் சரவணனுக்கு முக்கிய பங்கு உள்ளது.

 

nellai police

 

"நமது நெல்லை-பாதுகாப்பான நெல்லை" என்ற பொறுப்புணர்வோடு களப்பணியாற்றும் சரவணன், டுவிட்டர், பேஸ்புக் பக்கத்திலும் பல்வேறு கருத்துக்களை பகிர்கிறார். அவற்றுக்கு நல்ல ரெஸ்பான்சும் கிடைத்திருக்கிறது. ரசிகர்கள் தங்களது அபிமான நட்சத்திரங்களுக்கு பேனர் வைப்பதற்கு பதிலாக ஆக்கப்பூர்வ பணிகளை செய்யலாம் என பதிவிட்டார். உடனே சூர்யா ரசிகர்கள் சூர்யாவின் 'காப்பான்' படம் வெளியீட்டின்போது 200 பேருக்கு ஹெல்மட் கொடுப்போம் என வாக்குறுதி அளித்தனர்.

2003-ல் நெல்லை மாநகரை மையப்படுத்தி சாமி என்ற திரைப்படம் வெளிவந்தது. அதில் விக்ரம் நெல்லை மாநகர டி.சி கேரக்டரில் ஆறுச்சாமி என்ற கதாபாத்திரத்தில் நடத்திருப்பார். வில்லனாக நடித்த கோட்டா சீனிவாச ராவ், விக்ரமை பார்த்து 'நீ வந்தபிறகு சிட்டியே நல்லா மாறி இருக்குன்னு நம்ம பயலுவ பேசிக்கிறாங்க' என்பார். அந்த ஆறுச்சாமியின் பெயர் சரவணனுக்கு பொருந்தும் என்கின்றனர் நெல்லை மக்கள்...!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.