சிவகங்கையில் தடையை மீறிய ஆதித்தமிழர் பேரவையினர் கைது!
செப்.30 நாளில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தன்னுயிரை நாட்டுக்காக ஈகம் செய்திட்ட வீரத்தாய் குயிலி அவர்களின் 237வது வீரவணக்க நாளில் சிவகங்கையில் அரசு அமைந்துள்ள நினைவிடத்திற்கு மாவட்டச் செயலாளர் அழ.பாலு தலைமையில், மாநில துணைப்பொதுச் செயலாளர் கபீர் நகர் கார்த்திக், தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் மு.முத்துக்குமார், திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் இரா.சண்முகம், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் பா.ஆதவன் மற்றும் 30க்கும் மேற்ப்பட்ட நீலச்சட்டை பட்டாளம் வீரவணக்க மரியாதை செலுத்த முயன்ற போது சிவகங்கை சமத்துவபுரம் அருகே காவல்துறை கைது செய்து ரயில்வே பீடர் ரோடு பிஎன்எஸ் மஹாலில் சிறை வைத்தனர்.