Skip to main content

மனம் திருந்திய மாவோயிஸ்ட்; ஆவின் பாலகம் வைத்துக் கொடுத்த காவல்துறை

Published on 19/11/2022 | Edited on 19/11/2022

 

Aavin milk booth -police help

 

கர்நாடக மாநிலம் ஷிவமோகா நகரைச் சேர்ந்தவர் சந்தியா என்கிற பிரபா. இவர் மாவோயிஸ்ட் இயக்கத்தின் மாநிலக் குழு உறுப்பினராக இருந்தார். இவரது கணவர் பி.ஜி.கிருஷ்ணமூர்த்தி. இயக்கத்தின் முக்கிய தளபதிகளுள் ஒருவராக இருந்தார். வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ்ட் அமைப்பு ஒடுக்கப்பட்ட பொழுது தென் மாநிலங்களைக் குறிவைத்து மாவோயிஸ்ட் அமைப்பினர் களமிறங்கினர்.

 

கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழகப் பகுதிகளின் முக்கிய தளபதியாகச் செயல்பட்டவர் ஷிமோகாவை சேர்ந்த பி ஜி கிருஷ்ணமூர்த்தி. மேற்குத் தொடர்ச்சி மலையே  இவர்களின் செயல் களமாக இருந்தது.

 

2007 முதல் இயக்கத்துக்காகத் தலைமறைவு பணிகளைக் கணவன் மனைவி இருவரும் செய்து வந்தனர். இவர்கள் மீது கர்நாடகா, கேரளா மாநிலங்களில் 40க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. காவல்துறை இவர்களின் தலைக்கு விலை வைத்துத் தேடப்படும் மாவோயிஸ்ட் என அறிவித்து இருந்தது.

 

2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கிருஷ்ணமூர்த்தியை கேரளா போலீசார் கைது செய்தனர். தன்னை கர்நாடகா அல்லது கேரளா போலீசார் சுட்டுக்கொன்று விடுவார்கள் எனப் பயந்து 2021 டிசம்பர் மாதம் பிரபா என்கிற சந்தியா தமிழ்நாடு க்யூ பிரிவு போலீசாரிடம் சரணடைந்தார்.  அவரை அரியூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தங்க வைத்த கியூ பிரிவு போலீசார் அவருக்கு மாதம் 4 ஆயிரம் வாழ்வாதார ஊதியம் தந்து அவரை பாதுகாத்து வந்தனர்.

 

சந்தியா மனம் திருந்தியதால் அவரின் மறுவாழ்விற்காகத் தமிழக அரசு வேலூர் மாவட்டம் அரியூர்  பகுதியில் ஆவின் பாலகம் அமைத்துக் கொடுக்க முடிவு செய்து அதற்கான வேலைகளைச் செய்தனர். ஆவின் பூத் தயாரானதும் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நவம்பர் 19 ஆம் தேதி துவக்கி வைத்தார்.

 

அப்போது பேசிய அவர், “கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம்  திருப்பத்தூர் மாவட்ட  காவல்துறையிடம் சரணடைந்த மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த பிரபாவுக்கு, தமிழக அரசின் சரணடைதல் மற்றும் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் ஆவின் பாலகம் அமைத்துத் தரப்பட்டுள்ளது. எனவே இதுபோன்று  சமூக விரோத செயல்கள் மற்றும் அரசுக்கு விரோதமாக ஈடுபட்ட நபர்கள் மனம் திருந்தி வருபவர்களுக்கு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

 

இந்த நிகழ்ச்சியில் தமிழக கியூ பிரிவு  கண்காணிப்பாளர் கண்ணம்மாள்,  வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபா சத்தியன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.