விஜயதாரணிக்கு தமிழிசை 3 கேள்வி

மத்திய, மாநில அரசுகளையும், தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜனையும் கடுமையாக விமர்சித்தார். அவரது இந்த பேச்சுக்கு பதிலளித்து தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கேட்கும் விஜயதாரணியிடம் 3 கேள்விகளை கேட்கிறேன். அதாவது, இந்தியா முழுவதும் நீட் தேர்வு என்ற கொள்கை முடிவை முதன் முதலில் கொண்டுவந்தது யார்?. இரண்டாவதாக நீட் தேர்வுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்துக்கு சென்று
வாதாடியது யார்?. காங்கிரஸ் மூத்த தலைவர் மனைவி நளினி சிதம்பரம் தானே? மூன்றாவது கேள்வி, கல்வியை மாநிலப்பட்டியலில் இருந்து, மாநில உரிமையிலிருந்து பொதுப்பட்டியலில் சேர்த்தது யார்? இவ்வாறு கூறியுள்ளார்.