Skip to main content

முன்னாள் நீதிபதிகளுக்கு பாஜக அரசு பதவி கொடுக்க காரணம்... மோடி, அமித்ஷாவின் திட்டத்தின் பின்னணி தகவல்!

Published on 21/03/2020 | Edited on 21/03/2020

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை மோடி அரசு ராஜ்யசபா உறுப்பினராய் ஆக்கியிருப்பது இந்திய அளவில் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. இது பற்றி விசாரித்த போது, பாலியல் குற்றச்சாட்டு அவர் மேல் எழுந்தது. அப்புறம் அவர் தலைமையிலான பெஞ்ச்லிருந்து அயோத்தி விவகாரம் தொடர்பாக தீர்ப்பு வந்தது. தற்போது ரிடையர்டுக்குப் பிறகு ராஜ்யசபா பதவி பெற்றிருப்பதும் சர்ச்சையில் உள்ளது. 

அதாவது, கடந்த ஆண்டு, தீபக் மிஸ்ரா, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த போது, இதே ரஞ்சன் கோகாய், தன் சக நீதிபதிகளான செல்லமேஸ்வர், மதன் பி தாக்கூர், குரியன் ஜோசப் ஆகியோரோடு ஊடகத்தினரை சந்தித்தார். உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தை அரசு ஆக்கிரமிக்கப் பார்க்கிறது. தங்களுக்குத் தேவையான நீதிபதிகளைக் கொண்ட அமர்வுகளைத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மூலம் உருவாக்க நினைப்பதாக மோடி அரசைக் கடுமையாக விமர்சித்தார். அப்படிப்பட்டவரை மோடி அரசு நியமன எம்.பி.யாக்கியிருப்பது கேள்வி குறியாக்கியுள்ளது. 

 

bjp



ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம் ரிடையர்டுக்குப் பிறகு கவர்னர் பதவி கிடைத்ததும் சர்ச்சை எழுந்தது.  குஜராத் தொடர்பான வழக்குகளில் சதாசிவம் தீர்ப்பளித்திருந்தார். அதேபோல் கோகாய் தற்போது பரபரப்பாக விவாதிக்கப்படுற ஒரு விவகாரத்தில் தீர்ப்பளித்தவர். அதாவது, 1971-க்குப் பின் இந்தியா வந்த வங்கதேச அகதிகளில் 2 ஆயிரம் பேரை அஸ்ஸாமில் கண்டுபிடித்து, அவங்களுக்கு குடியுரிமை இல்லை என்று வெளியே அனுப்பிய போது, இது தொடர்பான வழக்கை விசாரித்தவர் ரஞ்சன் கோகாய். குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய வேலை அரசுக்குக் கிடையாது. அந்தப் பொறுப்பு குடிமக்களுக்குதான் இருக்கிறது. அதனால் வெளிநாட்டில் இருந்து வந்த ஒவ்வொருவரும் தங்கள் குடியுரிமையை அவர்களே நிரூபிக்க வேண்டும் என்று தீர்ப்பு கொடுத்தார். இது தான், சி.ஏ.ஏ., என்.ஆர்.சியையெல்லாம் மோடி-அமித்ஷா கூட்டணி கொண்டுவர வாய்ப்பாக அமைந்தது. தற்போது  நாடாளுமன்றத்திலும் வெளியிலும் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் குரல் கொடுப்பதால், அந்தச் சட்டங்களுக்கு ஆதரவாக வாதங்களை வைக்க கோகாய் பயன்படுவார் என்று  பா.ஜ.க. எதிர்பார்ப்பதாக சொல்லப்படுகிறது.

நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியேற்பை எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்து எதிர்ப்பைப் பதிவு செய்ததும் ரஞ்சன் கோகாய் பதவியேற்பில் தான் என்று கூறுகின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.