Skip to main content

சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு இணையாக கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டும் முன்னாள் அமைச்சர்

Published on 19/11/2019 | Edited on 19/11/2019

 

சேப்பாக்கம் ஸ்டேடியம் மிகப்பெரிய பிரச்சனைக்குள்ளாகி, அதில் போட்டிகள் நடப்பது விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது. இதற்கிடையே சேப்பாக்கம் ஸ்டேடியம் அரசுக்கு கட்ட வேண்டிய 2500 கோடி ரூபாயை சலுகைத் தருமாறு எடப்பாடி பழனிசாமி அரசை சேப்பாக்கம் ஸ்டேடியத்தின் காவலரான இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் வலியுறுத்தி வருகிறார்.

 

 cricket stadium


 

இந்த நிலையில் சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு போட்டியாக ஒரு மிகப்பெரிய ஸ்டேடியத்தை திமுகவைச் சேர்ந்தவரும், ஜெகம் புகழும் பெயர்கொண்டவருமான முன்னாள் மத்திய அமைச்சர் பாண்டிச்சேரியில் கட்டி வருகிறார். இந்த ஸ்டேடியம் பல கோடி ரூபாயில் அமைகிறது. 
 

சமீபத்தில் வருமான வரித்துறை நடத்திய ரெய்டில் இவரது கல்லூரிகளில் 360 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் பிடிப்பட்டது. அதை சமாளிக்க வருமான வரித்துறையின் முன்னாள் அதிகாரியான முரளி என்கிற பெயர் கொண்ட அதிகாரிக்கு சென்னை தி.நகரைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் மூலம் பணம் கொடுத்து சமாளித்தார். 
 

ஆனால் பாஜகவை சேர்ந்தவர்கள் இவரை விடவில்லை. இப்பொழுது சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு இணையாக திமுகவைச் சேர்ந்தவர் ஸ்டேடியம் கட்டுகிறார் என்கிற தகவலை இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகியாக இருக்கக்கூடிய அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். 
 

அவர் ஸ்டேடியம் கட்டினாலும் சென்னைக்கு வரக்கூடிய போட்டிகள் எதையும் பாண்டிச்சேரிக்கு கொடுக்கக்கூடாது என சீனிவாசன் கோரிக்கை வைத்திருக்கிறார். ஜெய்ஷாவும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் இந்த தகவலை சொல்லியிருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 

விரைவில் வருமான வரித்துறை அதிகாரிகள் பாண்டிச்சேரியில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட கிரிக்கெட் ஸ்டேடியத்தின் மேல் பாய இருக்கிறார்கள் என வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கிரிக்கெட் கதைக்களத்தை கையிலெடுத்த ஜேசன் சஞ்சய்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
jason sanjay movie update

விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இவரது மகனான ஜேசன் சஞ்சய், கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சம்பந்தமாகப் படித்து வந்தார். இவர் குறும்படம் இயக்கும் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இயக்கம் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.  இப்படத்தை லைகா தயாரிக்கிறது. இப்படத்தில் கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. 

பின்பு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி லால் சலாம், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

மேலும் டெஸ்ட் என்ற தலைப்பில் சசிகாந்த் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.