Skip to main content

காங்கிரஸ் வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானி வெற்றி; புஷ்பா பட ஸ்டைலில் கொண்டாட்டம்

Published on 08/12/2022 | Edited on 08/12/2022

 

JigneshMevani for winning the Vadgam assembly constituency of Gujarat

 

குஜராத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. அதேபோல் இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியும் துவங்கி நடைபெற்று வருகிறது.  காங்கிரஸ், பாஜக என இருந்த குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல் களம் ஆம் ஆத்மியின் வருகையில் மும்முனைப் போட்டியாக மாறியது. 

 

குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 92 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். காலை முதல் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வந்த பாஜக தற்போதைய நிலவரப்படி 156 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ்  17 தொகுதிகளிலும்,  ஆம் ஆத்மி 5, மற்றவை 4 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.  இதன் மூலம் அறுதிப் பெரும்பான்மையாக இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று 7 வது முறையாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது. 

 

இந்நிலையில் குஜராத் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்றுள்ளார். குஜராத்தில் பட்டியலின மக்களுக்கு ஆதரவாக தொடர்ந்து இளம் தலைவராக உருவெடுத்து இருக்கும் இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு உனாவில் நடந்த படுகொலைக்கு எதிராக 2000க்கும் மேற்பட்ட பட்டியலின மக்களை ஒன்றாகத் திரட்டி பேரணி நடத்தி காட்டினார். தொடர்ந்து குஜராத்தில் நடந்த பல சமூக பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த ஜிக்னேஷ் மேவானி கடந்த 2017 ஆம் ஆண்டு நடைப்பெற்ற குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் வட்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு பாஜக வேட்பாளரை தனியாளாக தோற்கடித்து வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் வட்கம்  தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இதனைத் தொடர்ந்து பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த ஜிக்னேஷ் மேவானி கடந்த வருடம் காங்கிரசில் தன்னை இணைத்துக்கொண்டார். 

 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் வட்கம் தொகுதியில் போட்டியிட்ட ஜிக்னேஷ் மேவானி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரை தோற்கடித்து மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து இதனை அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது ஜிக்னேஷ் மேவானி புஷ்பா பட ஸ்டையில் தனது வெற்றியை கொண்டாடியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.