Skip to main content

மணமகனுக்குக் கரோனா... தனிமைப்படுத்தப்பட்ட மணமகள்!

Published on 16/06/2020 | Edited on 16/06/2020

 

jk


கரோனா காரணமாக திருமண வரவேற்பில் மணமகன் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படத்தியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்ததால் கடந்த 10ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்துள்ளார். 

அவருக்கு கடந்த 14ஆம் தேதி காலை திருமணம் நடைபெற்றுள்ளது. அன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருமண வரவேற்பு நடைபெற்று கொண்டிருக்கும் போதே மணமகன் மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மணமகள் உள்ளிட்ட உறவினர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்