Skip to main content

ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை

Published on 05/06/2018 | Edited on 05/06/2018
chidambaram,  jeyaraman

 

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை ஜூலை 10ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.  ஜூன் 5ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டிந்த நிலையில் அதனை நீட்டித்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.

 

ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கியதில் விதிகளை மீறியதாக ப.சிதம்பரம் மீது குற்றச்சாட்டு எழுந்தது.   இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது.  இதனால் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சிதம்பரம் முன் ஜாமீன் கோரினார்.  இந்த வழக்கில் ஜுன் 5ம் தேதி வரை சிதம்பரம் ஆஜராக தடை விதித்தது.  அதன்படி இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார்.  கைது நடவடிக்கையில்  மீண்டும் அவர் முன் ஜாமின்கோரியதை அடுத்து ஜூலை 10ம் தேதி வரை  சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்தது நீதிமன்றம்.  

 

சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜுலை 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.

சார்ந்த செய்திகள்

Next Story

மோடி இன்னொரு நமஸ்தே ட்ரம்ப் நடத்துவாரா? -ப.சிதம்பரம் கேள்வி

Published on 01/10/2020 | Edited on 01/10/2020

 

congress senior leader, former union minister chidambaram tweet

 

 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பா.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில்,

 

"கரோனாவால் இறந்தோர் விவரங்களை இந்தியா, சீனா, ரஷ்ய நாடுகள் மறைக்கின்றன என ட்ரம்ப் பேசினார். அதிக காற்று மாசு ஏற்படுத்துவதாக இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். தனது நண்பர் ட்ரம்ப் கௌரவப்படுத்த இன்னொரு நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியை மோடி நடத்துவாரா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

Next Story

காங்கிரஸ் செயற்குழு பட்டியல் வெளியீடு!  ப.சிதம்பரத்தை அவமானப்படுத்தியுள்ள சோனியா காந்தி!

Published on 12/09/2020 | Edited on 12/09/2020
cccc

 

 

அகில இந்திய காங்கிரசின் செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலை புதிதாக மாற்றியமைத்திருக்கிறார் சோனியா காந்தி. இந்த மாற்றலில் காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை சோனியாகாந்தி அசிங்கப்படுத்தி விட்டதாக அவரது ஆதரவாளர்கள் கொந்தளிக்கின்றனர். 

 

அவர்களிடம் நாம் பேசியபோது, "காங்கிரஸில் 'வொர்க்கிங் கமிட்டி' என்கிற கட்சியின் செயற்குழுதான் அதிகாரமிக்கது. காங்கிரஸின் வலிமையான அமைப்பு என்பது இதுதான். செயற்குழுவின் புதிய பட்டியலில் 22 பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் 15-தாவது இடத்தில் பிரியங்கா காந்தியும் 16-வது இடத்தில் ப.சிதம்பரத்தையும் பட்டியலிட்டிருக்கிறார் சோனியா. இதை விட அவரை யாரும் அவமானபடுத்திட முடியாது. 

 

இன்றைக்கு கட்சியிலுள்ள மூத்த தலைவர்களில் மோடி அரசை தைரியமாக எதிர்கொள்வதும் விமர்சிப்பதும் சிதம்பரம் தான். அவரைப் போய் 16-வது இடத்தில் வைத்திருப்பது தவறு. அதுவும் கட்சிக்குள் கடந்த வருடம் வந்த பிரியங்கா காந்திக்கு பிறகு சிதம்பரம் என்பதை எங்களால் ஜீரணிக்கவே முடியவில்லை " என்கிறார்கள். 

 

செயற்குழு உறுப்பினர்களை நியமித்திருப்பதுப்போல பல்வேறு மாநிலங்களின் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்களையும் மாற்றியமைத்திருக்கிறார் சோனியாகாந்தி. இதில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக இருந்த முகுல்வாஸ்னிக்கை மாற்றி விட்டு புதிய பொறுப்பாளராக தினேத் குண்டுராவ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, தமிழக எம்.பி. மாணிக்கம் தாகூரை தெலுங்கானா காங்கிரஸின் மேலிட பொறுப்பாளராக நியமித்துள்ளார் சோனியா.