Skip to main content

வனத்துறையில் மணல் கொள்ளை!

Published on 16/06/2018 | Edited on 16/06/2018


 

அரசு திட்டங்களான தொகுப்பு வீடு, பசுமை வீடுகள் கட்ட அரசு அனுமதி கொடுக்கிறது. ஆனால் அந்த வீடுகளை கட்ட மணல் கொடுக்க மறுக்கிறது. ஆறுகளின் ஓரங்களில் உள்ள மக்கள் கூட தங்கள் தேவைக்கு ஒரு பிடி மண் எடுக்க அனுமதியில்லை, அப்படி எடுத்தாலும், போலீஸ் வருவாய்துறை ஓடிவந்து பிடித்துக்கொள்கிறது. அபராதம், தண்டனை விதிக்கிறது.

ஆனால் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கூத்தக்குடியில் மணிமுத்தாற்றில் மணல் கொள்ளை நடப்பதை வனத்துறை, வருவாய்துறை - காவல்துறை என எந்த துறையும் கண்டுகொள்ளவில்லை. ஏன்? எல்லாம் மாமூல் மழைதான் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
 

கூத்தக்குடி கோமகி ஆற்றங்கரையோரம் உள்ளது வனத்துறைகாடு. இந்த பகுதி ஊரில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் மக்கள் நடமாட்டம் குறைவு. இங்கே தனி நபர் பட்டாவில் கொஞ்சமாக செங்கல் சூளைக்கு மண் எடுப்பதாக போக்குகாட்டிவிட்டு அதனை சுற்றியுள்ள வனத்துறை மற்றும் அரசு புறம்போக்கு பகுதிகளில் எல்லாம் நெய்வேலி சுரங்கம் போல மண்ணை தோண்டி இரவு முழுவதும் விழுப்புரம், சேலம், பெரம்பலூர், கடலூர் என பல மாவட்டங்களுக்கு கடத்தப்படுகிறது. 
 

இந்த பகுதிக்குள் நடக்கும் மண் - மணல் கொள்ளை பற்றி கேள்விப்பட்ட நாமும் டூவீலரில் கூத்தாடி அண்ணாநகர் பகுதியில் மேற்கு நோக்கி மண் சாலையில் பயணித்தோம் 50 மீட்டர் தூரத்திற்கு இரண்டு பேர் என யாரும் உள்ளே செல்லவிடமால் தடுத்துமிரட்டி அனுப்பினார்கள். பிறகு சில நாட்கள் கழித்து காணாமல்போன மாட்டை தேடும் போகும் விவசாயி போல கையில் கயிற்றோடு தலையில் தலைப்பாகையோடும் அப்பகுதிக்கு சென்று பார்த்தோம். 
 

அங்கு நமக்கு அதிர்ச்சியாக இருந்தது. வனத்துறையின் காட்டில் ஆடு, மாடுகள் மேய்க்க கூடாது. காய்ந்த விறகுகளை பொறுக்கக் கூடாது. மீறினால் வழக்குப்போட்டு அபராதம் வசூலிப்பார்கள். இந்த காட்டில் மான், மயில், காட்டுபன்றிகள் என வனவிலங்குகள் ஏராளம் வாழ்கின்றன. அப்படிப்பட்ட வனத்துறை காட்டில் சுரங்கம்போல பல அடி அழத்துக்கு மண்ணை தோண்டி கடத்திய காட்சி நம்மை மிரள வைத்தது. அங்கு நடமாடிய விவசாயி ஒருவரை கேட்டோம். இது எப்படி? என்று அக்கம், பக்கம் பார்த்துவிட்டு தம்பி பகல்ல இந்த பக்கம் யாருமே வரமுடியாது.
 

தடிதடியாட்கள் விரட்டுவார்கள். நீங்க எப்படி வந்தீங்க... சீக்கிரம் போங்க... அவங்க கண்ணில மாட்டினால் அவ்வளவு தான் என்றவர், பல அதிகாரிகளுக்கு பணம் கொடுத்துவிட்டு இரவு டிராக்டர், டிப்பர் லாரிகள் மூலம் மண், மணல் கடத்தப்படுகிறது. வனத்துறை ஆட்கள் யாருமே இங்கே எட்டிக்கூட பார்ப்பதில்லை. மணல் மாபியாக்கள் ராஜ்யம் இங்கே கொடிகட்டி பரக்கிறது என்றார் அந்த பெரியவர். நாமும் மாடு தேடிபோன மாதிரியே மீண்டும் போன வழியில் வராமல் காட்டை சுற்றி வேறு வழியில் வெளியேறினோம்.
 

மணல் தட்டுப்பாட்டை பயன்படுத்தி மணல் கொள்ளையர்கள் செங்கல் சூளை முதலாளிகள், இரவுக் கொள்ளையடிக்கிறார்கள். எந்த பயமும் இல்லாமல் சாதாரண மக்கள் ஆற்றங்கரையோரம் அரிசியை எடுத்துபோனாலும் மணல் கடத்தலா என்று சோதனை போடுகிறார்கள்.
 

இதுகுறித்து கள்ளக்குறிச்சி வட்டாச்சியர் சுப்பிராயலுவிடம் கேட்டோம். ''அப்படியா? இது பற்றி என் கவனத்திற்கு வரவே இல்லையே... உடனடியாக விசாரிக்கிறேன்'' என்றார் இரண்டே வரியில் தமது பதிலை.

 

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Next Story

மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors appeared in the office of the ed

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் இன்று (25.04.2024) அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.