சுமார் 36 வயதுடைய ஒருவர், நாடியில் பலன்கேட்க வந்தார். அவரிடம் "என்ன விஷயமாகப் பலன்கேட்க வந்தீர்கள்'' என்றேன்.
"ஐயா, எனது 28 வயதிலிருந்து எனது திருமணத்திற்கு என் பெற்றோர்கள், பெண் தேடிவருகின்றார்கள். எனது அண்ணனுக்கு 40 வயதாகின்றது. அவருக்கும் இன்னும் திருமணம் நடக்கவில்லை. பெண் பார்த்து எங்களுக்கு பிடித்தால், பெண் வீட்டாருக்கு எங்களைப் பிடிக்கவில்லை. பெண்வீட்டார் எங்களுக்குப் பெண் கொடுக்க சம்மதித்தால், அந்த சம்பந்தம் எங்களுக்கு பிடிக்கவில்லை. எங்களுக்கும், பெண் வீட்டாருக்கும் பிடித்து, பொருத்தம் பார்க்க ஜோதிடர்களிடம் சென்றால், அவர்கள் ஏதாவது ஒரு கிரக தோஷத்தைக் கூறி, திருமணம் செய்யக்கூடாது என்று தடுத்து விடுகின்றார் கள். நாங்கள் திருமணம் செய்துகொள்வது, ஜோதிடர் களுக்கும் பிடிக்கவில்லை போலும்.
எங்கள் இருவரின் ஜாதகத் திலும், தோஷமுள்ளதாக் கூறி, ஜோதிடர்கள் கூறிய அனைத் துப் பரிகாரங்களையும், சிறிய கோவில்முதல், பிரசித்தமான பெரிய கோவில்கள் என அனைத்திலும் செய்துமுடித்து விட்டோம். ஒரு திருமணத் திற்கு எவ்வளவு செலவா குமோ, அவ்வளவு பணத்தை ஜோதிடர்களுக்கும், திருமணத் தரகர்களுக்கும், கோவில் பரிகாரங்களுக்கும் செலவு செய்துவிட்டோம். ஆனால் எந்தப் பலனும் இல்லை; திரு மணம் மட்டும் நடக்கவில்லை.
வேத ஜோதிடர்கள், திருமணத்தடைக்கு, கிரக தோஷங்கள் காரணம் என்று கூறுகின்றார்களே தவிர, அந்த தோஷம், எவ்வாறு? எப்போது? எப்படி உண்டானது? என்று காரணத்தைக் கூறுவது இல்லை. கேட்டால், சரியான பதிலைக் கூறாமல், கிரக தோஷம்தான் காரணமென்று கூறிவிடுகின்றார்கள். கிரகத் திற்கு தோஷம் இருந்தால், அந்த தோஷம் நீங்க அந்த கிரகம் தானே பரிகாரம் செய்துகொள்ளவேண்டும்.
நான் பரிகாரம் செய்தால் எப்படி தோஷம் நிவர்த்தியாகும் என்று நான் நினைத்துக் கொள்வது உண்டு. எனக்கும், என் அண்ணனுக் கும் திருமணம் நடக்குமா? நடக்காதா? இதற்கு உண்மையான காரணத்தை அறிந்து கொள்ளவே அகத்தியரை நாடிவந்துள்ளேன்'' என்று மிகவும் மனம் நொந்து பேசினார்.
ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றி, பலன்கூறத் தொடங்கினார். தனக்கு திருமணம் நடக்கவில்லையென்று, மிகவும் விரக்தியுடன் என்னைத் தேடிவந்துள்ளான். என்னை நாடிவந்த ஜீவனுக்கு, நான் ஓலைமூலம் அவர்களை நாடிவந்து, பலன் கூறுவேன். இவன் சகோதரன் தன்னைப் பற்றி அறிந்துகொள்ள, அகத்தியனை நாடிவரவில்லை. அதனால், அவன் வினை, விதிபற்றிக் கூறமாட்டேன். இவன் திருமணத்தடைக்கு காரணம் கூறுகின் றேன் அறிந்துகொள்ளட்டும்.
முற்பிறவியில் இவன், வசதி, வாய்ப்புகளுள்ள, வளமான ஒரு குடும்பத்தில் பிறந்து வாழ்ந் தான். சொத்துகள் இருந்ததால், எந்த ஒரு தொழில், உத்தியோகத்தையும் தேடிக்கொள்ளா மல், குடும்ப சொத்துகளை பராமரித்து வாழ்ந் தான். அந்த பிறவியில் வாலிப வயதில், அதே ஊரில் வசிக்கும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவன் உறவுப் பெண் ஒருவளை விரும்பி, அவளையே திருமணம் செய்து கொள்வேன் என்று சத்தியம்செய்து, அவளிடம் நெருக்கமாகப் பழகிவந்தான். அவளும் இவன் பேச்சை நம்பி பழகிவாழ்ந்தாள்.
இவனுக்கு திருமணம் செய்துவைக்க, பெற்றோர் முயற்சித்து, பெண் பார்க்கத் தொடங்கினார்கள. ஆனால், இவனோ, தான் ஒரு பெண்ணை விரும்புவதாகவும், அவளைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று குடும்பத்தினரிடம் கூறவில்லை. பெற்றோர் பார்க்கும் பெண்ணையே திருமணம் செய்து கொள்கின்றேன் என்று கூறிவிட்டான். இவனுக்கு வேறு இடங்களில் பெண் தேடுவதை அறிந்த அந்தப் பெண், இவனிடம், தன்னிடம் பழக்கம் இருப்பதாக, தன்னைப் பற்றி வீட்டுப் பெரியவர்களிடம் கூறி, திருமணம் செய்ய சம்மதம் பெறச் சொன்னாள். ஆனால், இவன் மறுத்து, விட்டான்.
ஒரு பெண்ணைப் பார்த்து, இவனுக்கு திருமணம் செய்துவைத்தார்கள். அந்தப் பெண், விஷம் குடித்து மரணம் அடைந்தாள். அவள் இறக்கும்போது இந்த பிறவியில் மட்டு மல்ல; இனி எந்த பிறவியிலும், இவன் வேறொரு பெண்ணை மணந்து, நிம்மதியாக, சந்தோஷ மாக வாழக்கூடாது என்று சாபமிட்டு இறந்தாள்.
ஆனால் அவள் ஆத்மாவின் கோபம் மட்டும் இன்னும் தீரவில்லை; சாந்தியடையவில்லை.
இவன் திருமணம்செய்த பெண்ணுடன் வாழ்ந்ததில், அந்தப் பெண் கர்ப்பம் அடைந்து, குழந்தையைப் பெற்றுவிட்டு, பிரசவத்திலேயே இறந்தாள். அந்தக் குழந்தையை வளர்க்க, இறந்துபோன மூத்த மனைவியின், தங்கையை அவனுக்கு இரண்டாம் தாரமாக மணமுடித்து வைத்தார்கள். பெண்விட்ட சாபம், அவளுக்கும் உடல் நோயை உருவாக்கி தாம்பத்தியத்திற்கு தகுதியில்லாதவளாகச் செய்துவிட்டது. இரண்டாவது மனைவியுடனும் தாம்பத்திய வாழ்க்கை தடைபட்டுப் போனது.
முற்பிறவியில் தன்னை விரும்பிய பெண்ணை, ஒதுக்கியதால் உண்டான பெண் சாபம், இந்த பிறவியிலும் தொடர்ந்து, இவனுக்கு திருமணம் முடிந்து, ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழமுடியாமல் தடுத்துவருகின்றது என்று காரணத்தைத் சொல்ல...
இந்த சாபம் நிவர்த்தியாகி, எனக்குத் திருமணம் நடைபெற அகத்தியர் தான் வழி காட்ட வேண்டும் என்றார்.
ஓலையில் அகத்தியர், சாபநிவர்த்தி முறைகளையும், இவளுக்கு இந்தப் பிறவியில், மனைவியாக வரப்போகின்றவளைப் பற்றிய விவரங்களையும் கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.
ஒவ்வொரு ஆண்- பெண்ணின் திருமணத் தடைக்கு செவ்வாய், ராகு, கேது போன்ற கிரகங்கள் காரணமில்லையென்றும், ஒரு பிறவியில் தன்னை நம்பியவர்களுக்குச் செய்த பழியும், பாவமும், செய்த சத்தியமும், பெற்ற சாபமும் எத்தனை பிறவியெடுத்தாலும் தொடர்ந்துவந்து பாதிப்பை தரும் என்பதை யும், பரிகாரம் பலிக்காமல், பலன்தராமல் போவதற்கு, இந்த பூமியில் ஆண்டவன், கடவுள் சக்தியைவிட, மனித ஆத்மாவின் சக்தியே வலிமையானது என்பதை நானும் தெரிந்து கொண்டேன்.
செல்: 99441 13267