Skip to main content

கருத்துக்கணிப்பை வைத்து அரசியல் செய்த பாஜக! அதிர்ச்சி தகவல்!

Published on 22/05/2019 | Edited on 22/05/2019

மும்பை பங்குச் சந்தையில் திங்களன்று ஒரே நாளில் 1000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் எகிறியது.  முதல் நாள் ஞாயிறு மாலை வெளியான வாக்குப் பதிவிற்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பா.ஜ.க கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என்பதுதான் பங்குச் சந்தை குறியீட்டு எண்ணை உயரவைத்தது. இப்படிப் பலக் குறியீடுகளை எக்ஸிட் போல் மூலம் உருவாக்க நினைக்கிறது பா.ஜ.க. என்கிறார்கள் டெல்லி அரசியல் நோக்கர்கள்.

 

bjp



நீண்ட அனுபவம் மிக்க மூத்த பத்திரிகையாளரைத் தொடர்புகொண்டபோது, மகாராஷ்ட்ரா முதல் டெல்லி வரை பா.ஜ.க. சுனாமி இருப்பதாக இந்தக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இந்தி பேசும் மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் மாநிலக் கட்சிகளைவிட பா.ஜ.க. பலமான வெற்றியைப் பெறும் என்கிற கணிப்புகள், தமிழ்நாடு, ஒடிசா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா போன்ற இந்தி பேசாத மாநிலங்களில் வேறு விதமான கணிப்புகளை வெளிப்படுத்துகின்றன. மேற்குவங்கத்தில் திரிணாமுலுக்கும் பா.ஜ.க.வுக்கும் நெருக்கமான போட்டி இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.


 

 

bjp



லோக்கல் வேட்பாளர், மாநிலத்தில் உள்ள பிரச்சினை எல்லாவற்றையும் பின்தள்ளி மோடியின் இமேஜை முன்வைத்தே கணிப்புகள் வெளியாகியுள்ளன. உ.பி.யில் அமைந் துள்ள அகிலேஷ்+மாயாவதி கூட்டணி, பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதாதளம்+ காங்கிரஸ் கூட்டணி இவற்றின் தாக்கம் எப்படி என்பதைத் தேர்தல் முடிவுகள்தான் காட்ட வேண்டும். சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் வென்ற ராஜஸ் தான், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பா.ஜ.க. முழுமையாக வெல் லும் என்கிற கணிப்புகளின் தன்மையும் கவனிக்கத் தக்கவை. இதன் மூலம் நெருக்கமான-கடுமையான போட்டிகள் உள்ள பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை வரை பா.ஜ.க. கவனம் செலுத்தி, எப்படியாவது ஆட்சியைத் தக்க வைக்க விரும்புகிறது'' என்றார் விளக்கமாக.


  modi



மக்களின் தீர்ப்பை மாற்றி எழுதுவதற்கு அதிகாரத்தில் உள்ளவர்கள் திட்டமிடுவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கட்சியின் கவுண்ட்டிங் ஏஜெண்ட்டுகளை கவனப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்பின்றி இது சாத்தியமா என ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவரிடம் கேட்டோம்.  மதுரை ஓட்டு எண்ணும் அறைக்கு சீல் வைக்காமல் உள்ளே நுழைந்த சம்பவம், தேனியில் புது ஓட்டு மெஷின்களைக் கொண்டு வந்தது ஆகியவை தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. கருத்துக்கணிப்புகள் மூலம் எதிர்கட்சிகளை பதட்டமடைய வைத்து, அவர்களை திசைதிருப்பி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் மோசடியான வெற்றியை அடைய பா.ஜ.க. திட்டமிடுகிறது என உடனடியாக எச்சரித்தார் மம்தா. எனினும், இயந்திரத்தில் பதிவான வாக்குகளை மாற்ற முடியாது. ஆளுந்தரப்புக்கு ஆதரவாக புது ஓட்டு மெஷினில் அதிக வாக்குகளைப் பதிவு செய்து, பழைய மெஷினுக்குப் பதில் அதை வைப்பது என்பதும் அத்தனை எளிதானதல்ல. அதனால், கடும் போட்டி நிலவும் தொகுதிகளில், குறைந்த வாக்கு வித்தியாசம் நிலவினால், அங்கே தேர்தல் அதிகாரிகள் துணையுடன் மோசடி செய்ய முடியும். 2016 சட்டமன்றத் தேர்தலில் பகல் 11 மணிக்கு மேல் பல தொகுதிகளில் அ.தி. மு.க. இதனைக் கடைப்பிடித்து ஆட்சியைத் தக்கவைத்தது. அதற்கு தேர்தல் ஆணையமும் ஒத்துழைத்தது. அப்போது மோடியும் ஜெ.வை ஆதரித்து வாழ்த்தினார். இப்போது மோடி அதே ஃபார்முலாவைக் கையாளலாம்'' என்றார். 


 

 

modi



தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்பு மூலம், கடும் போட்டி நிலவும் தொகுதிகளில் பா.ஜ.க.வின் வெற்றியை அறிவிக்கச் செய்வது, மாநிலங்களில் உள்ள உதிரிக்கட்சிகள் முன்னணி பெறும் இடங்களைத் தங்களுக்கு சாதகம் ஆக்குவது அல்லது அவர்களை விலை பேசுவது, காங்கிரஸ் தலைமையில் ஒன்றிணையும் கட்சிகளின் வியூகங்களை முறியடிப்பது, அதற்கேற்ப கருத்துக் கணிப்புகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட கோல்மால்களுக்கு மோடி டீம் ரெடியாகியுள்ளது அம்பலமாகி யிருக்கிறது. கணிப்புகளுக்கு மாறான முடிவுகள் வெளியானால், இந்த கோல்மால்களும் மக்கள் முன் அம்பலமாகும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
 

 

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.