Skip to main content

“அண்ணாமலையை போல் வாயால் உருட்டிக்கொண்டிருந்தால் பாஜக வளர்ந்துவிட்டதாக அர்த்தமா...? - கோவி. லெனின்

Published on 22/12/2022 | Edited on 22/12/2022

 

h

 

தமிழக அமைச்சரவையில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இவரின் இந்த அமைச்சரவை நுழைவை எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் இதுதொடர்பாக இலங்கைத் தமிழர் உரிமை மீட்புக்குழுவின் உறுப்பினர் கோவி. லெனின் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, " உதயநிதி சட்டமன்ற உறுப்பினர், அவரை அமைச்சராக்குவது என்பது முதல்வரின் தனிப்பட்ட முடிவு. அதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது. 

 

ஜெயலலிதா அமாவாசைக்கு அமாவாசை அமைச்சர்களை மாற்றினார். யாராவது ஒருத்தராவது ஏன் என்று கேட்டார்களா? திமுக என்றதுமே ஆயிரம் கேள்வி கேட்கிறீர்கள். ஜனநாயகத்துக்கு விரோதமாக ஜெயலலிதா செய்தால் இரும்பு பெண்மணி என்பார்கள். ஆனால் ஜனநாயகப்பூர்வமாக சட்டமன்ற உறுப்பினராக உள்ள ஒருவரை அமைச்சராக்கினால் அதில் குற்றம் சொல்வார்கள். அவர் துறையில் ஏதாவது குறை இருந்ததைக் கண்டுபிடித்து அவரை விமர்சனம் செய்தால் அதை அரசியல் ரீதியான செயல்பாடு என்று கூட எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அவர் வருவதே தவறு என்று கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். 

 

தமிழகத்தில் பாஜக வளர்ந்திருப்பதாகக் கூறுவதற்கு எந்த அளவுகோலை வைத்துள்ளீர்கள். ஆளாளுக்கு தினமும் எதையோ உருட்டிக்கொண்டு இருப்பதால் அவர்கள் தொலைக்காட்சிகளில் செய்திகள் வாயிலாக வருகிறார்கள். இதைத்தவிர அவர்கள் அதிகாரப்பூர்வமாக வாக்கு வங்கி உயர்ந்துள்ளது என்று எந்த ஆதாரமாவது உங்களிடம் இருந்தால் கொடுங்கள். நாங்கள் பாஜக வளர்கிறது என்று ஏற்றுக்கொள்ள வேண்டுமானால், ஏதேனும் நிரூபிக்கப்பட்ட ஆதாரமும் தேவை. இவர்களிடம் அப்படி ஏதாவது இருக்கிறதா? தேர்தலில் நின்று தங்களின் பலத்தை இதுவரை சோதித்துள்ளார்களா? தேர்தலில் கூட கூட்டணி கிடைக்காமல் தனியாக நின்று பார்த்திருக்கிறார்கள். ஆனால் மக்கள் இவர்களுக்கு வாக்களித்தார்களா என்று பார்க்க வேண்டும். இவர் உருட்டல்களை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்" என்றார்.


 

 

Next Story

'நீங்கள் எல்லோரும் கலைஞரின் பேரன்கள் தான்' - தயாநிதி மாறனை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
'You are all grandsons of the artist'- Udayanidhi campaign supporting Dayanidhi Maran

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி எழும்பூர் டாணா தெரு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''தயாநிதி மாறனை உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற வாக்கு கேட்பதற்கு இங்கே வந்தேன். ஆனால் இங்கு வந்து பார்த்த பிறகு தான் தெரிகிறது என்னைவிட அதிக ஆர்வத்தோடு, எழுச்சியோடு அவரை வெற்றி பெறச் செய்வதில் நீங்கள் முனைப்போடு இருக்கிறீர்கள் என்பது. நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டு. கடந்த 2019 தேர்தலில் தயாநிதிமாறனை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். அதற்கு நான் பலமுறை  நன்றி தெரிவித்திருக்கிறேன். நான் இந்த பகுதிக்கு வருவது இது முதல் தடவையோ, இரண்டாவது தடவையோ அல்ல. இந்த மூன்று வருடத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட முறை குறையாமல் இங்கே வந்திருக்கிறேன்  கொரோனா காலத்திலும் சரி, மழை வெள்ள காலத்திலும் சரி அனைத்து பிரச்சனையின் போதும் இங்கே வந்திருக்கிறேன்.

அந்த உரிமையோடு கேட்கிறேன் குறைந்தது 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தயாநிதிமாறனை வெற்றி பெற வைக்க வேண்டும். எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் டெபாசிட் பெறக்கூடாது. நான் கலைஞர் பேரன் சொன்னதை கண்டிப்பாக செய்வேன். நீங்களும் நிறைவேற்ற வேண்டும். வேட்பாளரும் கலைஞர் பேரன் தான். கலைஞர் பேரனுக்கு கலைஞர் பேரன் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். இங்கு இருக்கும் அத்தனை பேரும் கலைஞரின் பேரன்கள் தான். நீங்கள் அத்தனை பேரும் பெரியாரின் பேரன்கள் தான், நீங்கள் அத்தனை பேரும் அண்ணாவின் பேரன்கள் தான். நாம் அனைவரும் கொள்கை பேரன்கள், லட்சிய பேரன்கள்'' என்றார்.

Next Story

''விஜய்யின் மக்கள் பணி சிறக்கட்டும்''- அமைச்சர் உதயநிதி வாழ்த்து!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
"May his people succeed in their work" - Udayanidhi wishes

விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். கட்சியின் பெயரை அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.

இதனிடையே கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிட்ட விஜய், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள ஒரு படத்தில் நடித்துவிட்டு முழுமையாக கட்சிப் பணிகளை கவனிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க, விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றுக்காக வந்த அமைச்சர் உதயநிதியை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள், நடிகர் விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிளித்த அவர், 'இந்திய ஜனநாயகத்தில் யாரும் அரசியல் கட்சி இயக்கம் தொடங்கலாம். அதற்கான உரிமை இருக்கிறது. நடிகர் விஜய் அந்த முடிவை எடுத்திருக்கிறார். அவருக்கு நாம் அனைவரும் சேர்ந்து பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்வோம். அவருடைய மக்கள் பணி சிறக்கட்டும்'' என்றார்.