Skip to main content

ஒப்பந்தமெல்லாம் சம்மந்திக்கு, ஒப்பாரி வைக்கும் நிலை மக்களுக்கு... எட்டு வழி சாலை, எடப்பாடி குடும்பத்திற்காகவா...?

Published on 26/06/2018 | Edited on 26/06/2018

சேலத்திலிருந்து சென்னை வரை அமைக்கப்படும் பசுமை வழிச்சாலையில் எடப்பாடியின் குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து லாபம் பார்ப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன'' என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

 

eps son mithun



அதற்கு முன்னுதாரணமாக தமிழகம் முழுவதும் இதுவரை எடப்பாடி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை உதாரணம் காட்டுகிறார்கள்.

கடந்த வருடம் நெடுஞ்சாலைத் துறையில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் எல்லாம் சந்திரகாந்த் ராமலிங்கம், பி.சிவசுப்ரமணியம், பி.நாகராஜன், சேகர்ரெட்டி ஆகியோருக்கு சொந்தமான நிறுவனங்களான ராமலிங்கம் கம்பெனி, எஸ்.பி.கே. கம்பெனி, எக்ஸ்பிரஸ் வே பிரைவேட் லிமிடெட், பாலாஜி டோல்வே, மதுரை பிரைவேட் லிமிடெட் ஆகிய கம்பெனிகளுக்குத்தான் கொடுக்கப் பட்டுள்ளன.

 

 


இதில் முதலில் வரும் சந்திரகாந்த் ராமலிங்கம் என்பவர், எடப்பாடி குடும்பத்துக்கு சம்பந்தி வழியிலான உறவினர். எடப்பாடி பழனிசாமியின் மகன் திருமணம் செய்திருக்கும் திவ்யாவிற்கு சகோதரியான சரண்யாவின் கணவரின் சகோதரர் ஆவார். இந்த சந்திரகாந்த் ராமலிங்கம் ரொம்ப விவகாரமான பேர்வழி. கடந்த வருடம் நரேந்திரமோடி பண மதிப்பிழப்பு நட வடிக்கை மேற்கொள்ளும்போது பெங்களூரு நகரில் கோடிக்கணக்கான 2,000 ரூபாய் நோட்டுக ளுடன் சிக்கியவர். கூவத்தூரில் சசிகலாவிடம் எடப்பாடி, ""அம்மா என்னையும் மத்திய பா.ஜ.க. அரசு விட்டு வைக்கவில்லை. எனது உறவினர் மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் நிற்காமல் எனது சம்பந்தியான பி.சுப்ரமணியம், நம்ம அம்மா ஆட்சிக் காலத்தில் பெரியளவு கட்டுமான பணிகளையும் நெடுஞ்சாலை பணிகளையும் மேற்கொண்ட பெரிய காண்ட்ராக்டர். அவரது வீட்டில் வருமான வரித்துறையும் சி.பி.ஐ.யும் சேர்ந்து ரெய்டு நடத்தியிருக்கின்றன.

  eps with nitin katkari



சந்திரகாந்த் ராமலிங்கம், பி.சிவசுப்ரமணியம் இருவர் மீதும் வருமானவரித்துறையும் சி.பி.ஐ.யும் வழக்கு பதிவு செய்துவிட்டு, "நாங்கள் சொல்வதை கேளுங்கள். இல்லையேல் இந்த இருவரோடு சேர்ந்து அவர்களது பெண்ணை திருமணம் செய்த ஒரே காரணத்துக்காக எனது மகன் மிதுனையும்- அவர்களது சம்பந்தி என்பதால் என்னையும் கைது செய்வேன்' என சி.பி.ஐ. மிரட்டுகிறது. அவர்களிட மிருந்த பணம் எல்லாம் நான் ஊழல் செய்து சம்பாதித்த பணம் என சொல்வோம் என தொல்லை தருகிறார்கள்'' என்று கதறியிருக்கிறார்.

பா.ஜ.க.வினர் எப்படி எடப்பாடியை அவர்களது வலையில் விழ வைக்கிறார்கள் என விளக்கி சொல்லும் அளவிற்கு சந்திரகாந்த்தும் சுப்ர மணியமும் புகழ்பெற்றவர்கள். இன்னொரு காண்ட் ராக்டரான பி.சுப்ரமணியம்தான் உலக வங்கி உதவி யுடன் எடப்பாடி அரசு நிறைவேற்ற திட்டமிட் டுள்ள திருநெல்வேலி-செங்கோட்டை-கொல்லம் இடையிலான நான்கு வழி நெடுஞ்சாலைத் திட்டத் திற்கான டெண்டரில் ஒரேயொரு ஒப்பந்ததாரராக பங்கெடுத்தவர். சாலையில் சுங்கவரி வசூலாக 8 வரு டங்களுக்கு தலா 45 கோடி ரூபாய் வசூல் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தை நிறைவேற்ற 180 கோடி ரூபாயை மானியமாக மத்திய அரசு தருகிறது.

 

 


இப்படி ஏகப்பட்ட மானியங்கள் உள்ள நிலையில் தனது சம்பந்தி மட்டுமே ஒரேயொரு ஒப்பந்ததாரராக வரவைக்கப்பட்டதனால், முதலில் திட்டமிடப்பட்ட ரூ.407 கோடியிலிருந்து எந்த காரணமும் இல்லாமல் ரூ.720 கோடியாக திட்ட மதிப்பை உயர்த்தினார் எடப்பாடி. அதனால் அரசுக்கு 493 கோடி ரூபாய் நஷ்டம். (மானியம் 180 கோடி ரூபாய் சேர்த்து) அத்துடன் 8 வருடங் களுக்கு 360 கோடி ரூபாய் சுங்க வரி வசூல் வேறு வருகிறது. இப்படி போனால் சொந்தக்காசு ஒரு பைசா கூட செலவழிக்காமல் சாலையும் போட்டு திட்ட மதிப்பான 720 கோடியை எடப்பாடி தாரை வார்த்து விட்டார் என்கிறார்கள் நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள். இதேபோல் ஒட்டன்சத்தி ரம், தாராபுரம், அவினாசிபாளையம் ஆகிய ஊர்களுக்குள் செல்லும் நெடுஞ்சாலையை நான்கு வழிச் சாலையாக்கும் திட்டத்தை சந்திரகாந்த் ராமலிங்கத்திற்கு கொடுத்துள்ளார் எடப்பாடி. ஒப்பந்ததாரரின் லாபத்தோடு சேர்த்து கணக்கிட்டால் ஒரு கிலோமீட்டர் சாலை அமைக்க 2.2 கோடி ரூபாய் போதும். வெறும் 70 கிலோமீட்டர் வரும் இந்த சாலையை அதிகபட்சம் 220 கோடி ரூபாயில் அமைக்க முடியும். ஆனால் எடப்பாடி இந்த சாலைக்கு 1515 கோடி ஒதுக்கியுள்ளார். மொத்தத்தில் 1315 கோடி ரூபாய் இந்த திட்டத்திற்கு அதிகமாக ஒதுக்கப்பட் டுள்ளது. இதில் மத்திய அரசு கொடுக்கும் 315 கோடி ரூபாய் மானியம், 8 வருடங்களில் வருடத்திற்கு 150 கோடியாக வரும் சுங்க கட்டணம் மட்டும் 1200 கோடி ரூபாய் வருகிறது. ஆக மொத்தம் 200 கோடி ரூபாய்க்கு சாலை போட்டு மொத்தம் 2830 கோடி ரூபாய் இந்த திட்டத்தில் சம்பாதிக்கப்படுகிறது என்கிறார்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்.

 

eps-eps-son


இதேபோல் மதுரை ரிங்ரோட்டை நான்கு வழியாக்கும் திட்டத்தில் சேகர்ரெட்டியை களமிறக்கி யுள்ளார் எடப்பாடி. எல்லாம் நினைத்தே பார்க்க முடி யாத கொள்ளை என்கிறார்கள் நெடுஞ்சாலைத் துறை யைச் சேர்ந்தவர்கள். இதில் சம்பந்தப்பட்டிருக்கும் எடப்பாடியின் சம்பந்தி குடும்பம் சாதாரண குடும் பம். இவர்களின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை. இவர்களது தொழில் காண்ட்ராக்ட் தான் என்றாலும் தொடக்க காலத்தில் வீட்டுவசதி வாரிய கட்டிடங்களை கட்டும் வேலைதான் செய்து வந்தார்கள். எடப்பாடியின் சம்பந்தி ஆனதும் இவர்கள் எட்டிய உயரம் அளவிட முடியாதது.

எம்.ஜி.ஆர். சமாதியில் ஜெ. ஆட்சியில் வைக்கப்பட்ட பறக்கும் பெண் குதிரை, நாமக்கல் கவிஞர் மாளிகை எனப்படும் தலைமைச் செயலக கட்டிடம், சட்டமன்ற வைரவிழா நினைவு வளைவு, தமிழகம் முழுவதும் அரசு கட்டிடங்கள் என புகுந்து விளையாடும் எடப்பாடியின் சம்பந்தி குடும்பம், இன்று சசிகலா குடும்பத்துடன் மோதும் அளவிற்கு பணபலத்தில் வலுப்பெற்ற குடும்பமாகி விட்டது. இதில் சந்திரகாந்த் ராமலிங்கமும் மிதுனும் ஒரே குடும்பத்தில் பெண் எடுத்தவர்கள் என்கிற வகையில் உறவினர்கள். எடப்பாடி பழனிச் சாமி, அவரது மகன் மிதுன், எடப்பாடி சம்பந்தி சந்திரகாந்த் ராமலிங்கம் ஆகியோர் நெடுஞ் சாலைத்துறையில் கொள்ளையடிக்கிறார்கள் என முதலில் குரல் கொடுத்தவர் தினகரன் அணியை சேர்ந்த வெற்றிவேல்.

 

 


"தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கும் நெடுஞ்சாலை திட்டங்களில் 5,000 கோடி ரூபாய் கொள்ளையடித்ததற்கான ஆவணம் எங்களிடம் உள்ளது. அதை விரைவில் வெளி யிடுவேன்'' என அசராமல் சவால் விடுகிறார் தி.மு.க. அமைப்புச் செயலாளரான வழக்கறிஞர் ஆர். எஸ்.பாரதி. ""எடப்பாடி பழனிசாமி ஜெ.வின் ஆட்சிக் காலத்திலேயே நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தவர். அவரும் அவரது உற வினர்களும் நெடுஞ்சாலைத்துறை யைப் பயன்படுத்தி கொள்ளை அடிக்கிறார்கள். எனவே ஜெ.வை வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ப்பு என வழக்கு பதிவு செய்து விசாரித்தது போல் எடப்பாடியும் விசாரிக்கப்பட வேண்டும்'' என லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்திருக் கிறார். இந்நிலையில், சென்னை-சேலம் இடையே வெறும் 50 கிலோமீட்டர் பயண தூரத்தை குறைக்க ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் லட்சக்கணக்கான மரங்களையும் வெட்டி எடப்பாடி சாலை அமைக்க திட்டமிட்டுள்ளார். மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி எடப்பாடியின் நெருங்கிய நண்பர்.

 

eps-eps-son


""இந்த சாலையை மத்திய அரசுக்கு நெருக்க மான நிறுவனங்கள் அமைக்க வேண்டாம். எனது சொந்த பந்தங்களை வைத்து நானே அமைக்கிறேன். அதற்கு எழும் எதிர்ப்புகளை இரும்புக் கரம் கொண்டு அடக்குகிறேன் என கட்காரியுடன் இணக்கமாக எழுதப்படாத ஒப்பந்தம் போட்டுக் கொண்டதால்தான் 10 ஆயிரம் கோடிக்கு பசுமை வழிச்சாலை வந்தது'' என்கிறார்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வி.ஐ.பி.க்கள்.

இந்த பசுமை வழிச்சாலை அமைப்பு ஏகப் பட்ட புதிய விவகாரங்களை கிளப்பும் என்கிறார் கள் ஊழல் தடுப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.
 

Next Story

“கேட்கும் நிதியை மத்திய அரசு எப்போதும் கொடுப்பதில்லை” - இ.பி.எஸ் குற்றச்சாட்டு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 EPS alleges Centre government never gives the requested funds

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிக வெப்பம் காரணமாக அதிமுக சார்பில் மாவட்டந்தோறும் பல இடங்களில் நீர் மோர் பந்தலை வைக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் 4 இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து செய்தியாளர்களைச் சந்தித்துp பேசினார்.

அப்போது அவர், “தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்ட போதிலும் நிதியைக் குறைத்து தான் வழங்கினார்கள். திமுக மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதே கூட கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை. குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலிருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6,000 தூர்வாரப்பட்டன. தமிழகத்தில் போதைப்பொருளால் சமுதாயம் மிக மோசமான அழிவுக்குச் சென்று கொண்டிருக்கிறது ” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

இரட்டை இலை சின்னம் வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Madras High Court action decision on double leaf symbol case

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. 

அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. 

அப்போது ஓ. பன்னீர்செல்வம் தரப்பில், “பொதுக்குழு தொடர்பான பிரதான சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே எந்த தடையும் விதிக்கக் கூடாது” என வாதிடப்பட்டது. இதனையடுத்து ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதில், அ.தி.மு.க. கொடி, பெயர், சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் எனவும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருந்தது. மேலும் சம்பந்தப்பட்ட நீதிபதியை அணுகி நிவாரணம் பெற ஓ. பன்னீர்செல்வத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த 4 ஆம் தேதி (04.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆஜராகி வாதிடுகையில், “அ.தி.மு.க.வில் உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர்செல்வம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இன்னமும் தன்னை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது. அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஒருவர் இன்னமும் தன்னை ஒருங்கிணைப்பாளராக கூறி வருகிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் கட்சி நடவடிக்கையில் தலையிடுவது தொண்டர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமியின் தரப்பு வாதம் நிறைவடைந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (18-03-24) விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், ‘அதிமுக இரட்டை இலை சின்னம், கொடியை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதித்து அதிரடி தீர்ப்பளித்தார். இரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த ஏற்கனவே இடைக்கால தடை விதித்திருந்த நிலையில், தற்போது நிரந்தர தடை விதித்திருப்பது ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.