Skip to main content

திருமணம் ஆகாத பெண்களைக் குறிவைக்கும் காமுகன்கள் - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 02

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

Detective Malathi's Investigation : 02

 

சமுதாயம் எவ்வளவு முன்னேறினாலும் டெக்னாலஜி எவ்வளவு வளர்ந்தாலும் பாதிக்கப்படும் சமுதாயமாக பெண் சமுதாயம் தான் இருக்கிறது. அந்த வகையில், தான் சந்தித்த பெண்கள் அதிகம் குறிவைக்கப்பட்ட வழக்குகள் குறித்து முதல் பெண் துப்பறிவாளரான மாலதி விவரிக்கிறார்.

 

மணமகன் தேவை என்று விளம்பரம் கொடுத்த ஒரு பெண்ணை ஒரு பையன் தொடர்புகொண்டான். சில காலம் பேசிப் பழகிய பிறகு நேரில் சந்தித்தனர். இருவரும் அடுத்தடுத்த நிலைகளைக் கடந்தனர். ஆறு மாதங்களுக்குப் பிறகு அவளை விட்டு அவன் விலக ஆரம்பித்தான். இதனால் அவர்கள் எங்களைத் தொடர்புகொண்டனர். அவனுக்கு அந்தப் பெண்ணைப் பற்றி அனைத்தும் தெரியும். ஆனால், இவளுக்கு அவனைப் பற்றி ஒன்றும் தெரியாது. முட்டாள்தனமாக அவனோடு பழகியிருக்கிறாள். 

 

அவளைத் தொடர்ந்து அவனுக்கு மெயில் அனுப்பச் சொன்னோம். ஒருகட்டத்தில் அவன் வெளியே வந்தான். அவள் இருக்கும் இடத்திற்கு வந்து ரூம் போட்டு அவளை அழைத்துச் சென்றான். நாங்களும் அவர்களைப் பின்தொடர்ந்தோம். சுற்றி இருக்கும் அனைத்து இடங்களிலும் ஆள் வைத்து கண்காணித்தோம். அன்று முழுவதும் அவன் கால்டாக்சியிலேயே தான் சுற்றினான். அவனுடைய காரை கண்டுபிடித்தோம். அவன் பின்னணியை அறிந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. அவனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்தனர். 

 

சில நாட்களில் இந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டாள். காவல்துறையினர் எங்களையும் விசாரித்தனர். நாங்கள் நடந்த அனைத்தையும் கூறினோம். அவனுடைய இருப்பிடம் குறித்து நாங்கள் தகவல் தெரிவித்தோம். காவல்துறையினர் அவனை கைது செய்தனர். அவன் ஆன்லைனில் இதே வேலையாகத்தான் இருந்திருக்கிறான் என்பது அதன் பிறகு போலீஸ் விசாரணையில் தெரிந்தது. 

 

டேட்டிங் என்றால் என்ன என்பது குறித்த சரியான புரிதல் நம்முடைய இளைஞர்களுக்கு இல்லை. வெளிநாடுகளில் உறவுமுறையை உறுதி செய்து திருமணம் வரை கொண்டு செல்வதற்கே டேட்டிங் பயன்படுகிறது. இங்கு அதற்கான அர்த்தமே வேறு.

 

வெளிநாட்டினர் நம்முடைய கலாச்சாரத்தை இப்போது பின்பற்றி வாழ்கின்றனர். நம் இளைஞர்கள் தவறான பழக்கங்களையே கலாச்சாரம் என்று கருதுகின்றனர். ஒரு வழக்கில் சரியான துப்புகள் கிடைத்தால் மட்டும்தான் அதை நாங்கள் எடுத்துக்கொள்வோம். துப்புகளே இல்லாத வழக்குகளை நாங்கள் எடுப்பதில்லை. குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திலிருந்து நான் வரவில்லை என்றால் போலீசாரோடு எங்கள் டீம் உள்ளே வந்துவிடும். அனைத்தையுமே ப்ளான் செய்துவிட்டு தான் உள்ளே செல்வோம்.

 

 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.