Skip to main content

இன்னும் ஒரே மணி நேரத்தில் விஸ்வரூபம் எடுக்கும் மாண்டஸ்?

Published on 09/12/2022 | Edited on 09/12/2022

 

hjk

 

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது மாண்டஸ் புயலாக வலுவடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மாண்டஸ் சென்னையிலிருந்து தென்கிழக்கில் 90 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. புயல் சென்னையை நோக்கித் தொடர்ந்து நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

புயலானது அதிகாலை 3 மணிக்குள் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு முன்பாகவே புயல் கரையைக் கடக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக புயலின் கண் பகுதி இன்னும் ஒரு மணி நேரத்தில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில் கடந்த 5 மணி நேரமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல மாமல்லபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது; இதன் காரணமாக அப்பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் மின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டு கிடக்க வாய்ப்புள்ளதால் வெளியே உள்ளவர்கள் பத்திரமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்