Skip to main content

“எச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” - வி.சி.க வழக்கறிஞர் அணி மனு! 

Published on 27/10/2020 | Edited on 27/10/2020

 

VCK Lawyer Team Petition to chennai additional commissioner

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி சார்பாக இன்று சென்னை வடக்கு காவல் ஆணையரிடம் பாஜகவின் எச்.ராஜா, நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை காயத்திரி ரகுராம் மற்றும் பா.ஜ.க கல்யாணராமன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 
 

மேலும் இந்த மனு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் வழக்கறிஞர் அணியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் காஸி, “வி.சி.க.வின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் நோக்கத்திலும், இரண்டு சமூகத்தினர் மத்தியில் அமைதியைக் கெடுத்து கலகம் விளைவிக்கும் நோக்கத்திலும், தொல்.திருமாவளவன் பட்டியல் இனத்தவரைச் சார்ந்தவர் என்பதை நன்கு அறிந்து அவருக்கு எதிராக அவதூறு, வன்மம், தனிமனிதத் தாக்குதல், உயிருக்கு அச்சுறுத்தல், செய்திகளைத் தவறாகப் புனைவது, எழுதுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டும் வருகிற பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எச்.ராஜா, நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை காயத்திரி ரகுராம் மற்றும் பா.ஜ.க கல்யாணராமன் ஆகியோர் மீது உரிய ஆதாரங்களுடன் கொடுக்கப்பட்ட மனுக்கள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வரப்படுகிறது.

 

குறிப்பாக கடந்த 12.08.2020. அன்று எங்கள் கட்சியின் வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் த. பார்வேந்தன் ஆணையரை நேரில் சந்தித்து உரிய ஆவணங்களுடன் பா.ஜ.க கல்யாணராமன் மீது கொடுத்த புகார் மனுவைப் பெற்றுக்கொண்டு சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தும் மேற்சொன்னவர்கள் மீதும் குறிப்பாக கல்யாணராமன் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் தற்போது இந்த மனுவை ஏற்றுக்கொண்டு மேற்சொன்ன பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்தார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.