Skip to main content

காவலர் தேர்வுக்கு செல்ஃபோன் எடுத்துச் சென்ற இருவர் கைது!

Published on 14/12/2020 | Edited on 14/12/2020

 

Two arrested for taking cell phone to police station

 

காவலர் தேர்வுக்கு செல்ஃபோன் எடுத்துச் சென்ற இருவர் கைது!

 

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேற்று இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு படைவீரர் ஆகியோருக்கான தேர்வு நடைபெற்றது. கடலூர் மாவட்டம் முழுவதும் 18 மையங்களில் 28,624 பேர் தேர்வு எழுதினார்கள். 

 

இந்தத் தேர்வு எழுத வந்தவர்கள் செல்ஃபோன் மற்றும் எலக்ட்ரானிக் உபகரணங்கள் கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை. 

 

இந்த நிலையில், நெய்வேலி வட்டம் 10-ல் உள்ள ஒரு பள்ளியில் தேர்வு எழுதிய கடலூர் அருகே உள்ள ஆலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் மோகன்ராஜ் (22) என்பவர் தனது உள்ளாடைக்குள் செல்ஃபோனை மறைத்து எடுத்து வந்து அதன்மூலம் கேள்வித்தாளைப் படம் எடுத்து வாட்ஸ்அப் மூலம் அனுப்ப முயன்றபோது பிடிபட்டார். இதேபோல் நெய்வேலி மந்தாரக்குப்பம் அருகேயுள்ள சேப்ளாநத்தம் கிராமத்திலுள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் செல்ஃபோன் எடுத்து வந்து கேள்வித்தாளைப் படம் எடுத்து அனுப்ப முயன்ற திட்டக்குடி அருகேயுள்ள வெண்கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார்  என்பவரது மகன் வினோத்குமார் (24) என்பவரும் பிடிபட்டார்.

 

அதையடுத்து மோகன்ராஜ் மீது நெய்வேலி நகரக் காவல்நிலைய போலீசாரும், வினோத்குமார் மீது மந்தாரக்குப்பம் காவல் நிலைய போலீசாரும் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

 

காவல்துறைக்கான எழுத்துத்தேர்வு தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.