Skip to main content

மேடையில் உன்னுடன் உட்கார முடியாது... இயக்குனர் கூறியதால் கோபமான தெறி பட நடிகர்... பரபரப்பு சம்பவம்!

Published on 02/11/2019 | Edited on 04/11/2019

பிரபல இயக்குனர் ஒருவர் மருத்துவ கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் தெறி படத்தில் நடித்த நடிகரின் அருகில் அமர மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலக்காடு அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 31-ஆம் தேதி நடந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக நடிகர் பினீஷ் பாஸ்டின் மற்றும் பிரபல மலையாள இயக்குனர் அனில் ராதாகிருஷ்ணன் மேனன் ஆகிய இருவரையும் கல்லூரி நிர்வாகம் ஆகிய இருவரையும் அழைத்துள்ளனர். நடிகர் பினீஷ் பாஸ்டின் ஆக்ஷன் ஹீரோ பைஜூ,டபுள் பேரல், குட்டமாக்கான், கொலுமிட்டாயி உட்பட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். தமிழில் விஜய்யின் தெறி படத்திலும் நடித்துள்ளார். இயக்குனர் அனில் ராதாகிருஷ்ணன் மேனன் நார்த் 24 காதம் என்ற தேசிய விருது பெற்ற படத்தை இயக்கியவர்.

 

incident

 

cognizant news



இந்த நிலையில் நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு நடப்பதாக இருந்தது. அப்போது கல்லூரி மாணவர் சங்கத் தலைவர் நடிகர் பினீஷ் பாஸ்டின் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று நீங்கள் சிறிது நேரம் கழித்து விழாவிற்கு வாருங்கள் என்று தெரிவித்துள்ளார். அதற்கு நடிகர் பீனீஷ் பாஸ்டின் 6 மணி ஆகிவிட்டது விழாவிற்கு சரியான நேரத்திற்கு சென்று விடலாம் என்று கூறியுள்ளார். மீண்டும் அந்த மாணவர் சங்க தலைவர் நடிகரிடம் நீங்கள் கொஞ்சம் லேட்டா வாங்க சார் என்று தெரிவித்துள்ளார். பின்பு ஏன் லேட்டா வர சொல்றிங்க என்று கேட்டுள்ளார். அப்போது சிறப்பு அழைப்பாளராக, இயக்குநர் அனில் ராதாகிருஷ்ணன் மேனன் வந்திருக்கிறார், அவர் உங்களுடன் ஒரே மேடையில் அமர மறுக்கிறார். அதனால் அவர் சென்ற பின் நீங்கள் வாருங்கள் என்று தெரிவித்துள்ளனர். இதனால் கடுப்பான நடிகர் பினீஷ் பாஸ்டின் அவர்கள் சொன்னதை கேட்காமல் நேராக விழா நடக்கும் இடத்திற்கு சென்று விட்டார். அப்போது மேடையில் இயக்குனர் அனில் ராதாகிருஷ்ணன் பேசிக்கொண்டிருக்கும் போது நடிகர் பினீஷ் பாஸ்டின் மேடையில் இருந்த நாற்காலிகளுக்கு எதிரே இருந்த தரையில் அமர்ந்து கொண்டார். இதனால் அந்த நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

 

theri



 

incident



பின்னர் இந்த நிகழ்வு குறித்து பினீஷ் கூறிய போது, நான் சாதாரண கூலி வேலை செய்து இருந்து நடிகனாக ஆனேன். மேலும் எனது பெயருக்கு பின்னால் மேனன் இல்லை, நான் தேசிய விருதும் வாங்கியதில்லை. ஆனால் நான் உங்களை போல் ஒரு சாதாரண மனிதன். அதனால் தான் மனவேதனையில் தரையில் அமர்ந்து கொண்டேன் என்று தெரிவித்தார். இது பற்றி இயக்குனர் அனில் ராதாகிருஷ்ணன் கூறும் போது, என் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு அலைந்தவர் அவர் என்னருகே எப்படி உட்காரலாம் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இயக்குனர் தெரிவித்த கருத்துக்கு மலையாளத்தில் கடும் எதிர்ப்பு வந்த நிலையில், அனில் ராதாகிருஷ்ண மேனன் மன்னிப்புக் கேட்டுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மலரும் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன” - ரஜினி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
rajini condolence to kannada actor dwarkish passed away

கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு சினிமா துறைகளில் பணியாற்றியவர் துவாரகிஷ். 1964 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் நகைச்சுவை நடிகராக துவாரகிஷ் அறிமுகமானார். நடிகராக வெற்றி பெற்ற பிறகு, தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். அவர் 48 படங்களைத் தயாரித்துள்ளார் மற்றும் கிட்டத்தட்ட 19 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் இறந்துள்ளார். அவருக்கு வயது 81. வயது மூப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது வீட்டில், துவாரகிஷ் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rajini condolence to kannada actor dwarkish passed away

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது இரங்கலை பகிர்ந்திருந்தார். இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகிஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடனான மலரும் தருணங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“காலரைப் பிடித்து கேட்க வேண்டும்” - கிஷோர் கடும் விமர்சனம் 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
kishore against pm modi speech regards mutton in sawan

18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு தங்களது வேட்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் பிரதமர் மோடி, கடந்த 12ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் தேர்தல் பேரணியில், இந்தியா கூட்டணி தலைவர்கள், ஆட்டிறைச்சி சாப்பிட்டதன் மூலம் பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரின் பெயரை குறிப்பிடாமல் முகலாயர்களுடன் ஒப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, “நாட்டின் பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளைப் பற்றி காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணி மக்கள் கவலைப்படுவதில்லை. மக்களின் உணர்வுகளுடன் விளையாடி மகிழ்கிறார்கள்.

நீதிமன்றத்தால் தண்டனை பெற்று ஜாமீனில் இருக்கும் ஒருவர், அப்படிப்பட்ட குற்றவாளியின் வீட்டுக்குச் சென்று, சாவான் மாதத்தில் ஆட்டிறைச்சி சமைத்து மகிழ்ந்து, நாட்டு மக்களைக் கிண்டல் செய்ய வீடியோ எடுக்கிறார்கள். சட்டம் யாரையும் எதையும் சாப்பிடுவதைத் தடுக்கவில்லை ஆனால் இவர்களின் எண்ணம் வேறு. முகலாயர்கள் இங்கு தாக்கிய போது, கோயில்களை இடிக்கும் வரை அவர்களுக்கு திருப்தி ஏற்படவில்லை. அதனால் முகலாயர்களைப் போலவே சாவான் மாத வீடியோவைக் காட்டி நாட்டு மக்களைக் கிண்டல் செய்ய நினைக்கிறார்கள்” என்றார். கடந்த ஆண்டு செப்டம்பர் ராகுல் காந்தியும் லாலு பிரசாத் யாதவும் ஒன்றாக ஆட்டிறைச்சி சமைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் பிரதமரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் கிஷோர் பதிவிட்டுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ரஃபேல் முதல் தேர்தல் பத்திரம் வரை, மோடியும் அவரது கட்சியினரும், நம்முடைய பணத்தில் சாப்பிட்டுவிட்டு, யாரோ சாப்பிட்ட இறைச்சி குறித்து கேள்வி கேட்கின்றனர். மதவெறியையும், வெறுப்பையும் மட்டுமே பரப்பி, தேர்தல் நடத்தை விதிகளை மீண்டும் மீறியுள்ளனர். தேர்தலில் போட்டியிட அவருக்கும் அவரது கட்சிக்கும் என்ன தகுதி இருக்கிறது?

முதுகெலும்பில்லாத தேர்தல் கமிஷன், கைப்பாவை அமலாக்கத்துறை, சி.பி.ஐ., ஐ.டி அவருக்கு ஆதரவாக இருக்கின்றன. அவரின் காலரைப் பிடித்து நாம் கேட்காத வரை, அவர் எளிதில் மதவெறியையும், வெறுப்பையும் பரப்புவார்” என கடுமையாக விமர்சித்துள்ளார். ஏற்கெனவே விவசாயிகளின் போராட்டத்தின் போது, அவர்களுக்கு ஆதரவாக கிஷோர் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.