முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்க இருக்கிறார்.இதற்காக தற்பொழுது சென்னை ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகை புரிந்துள்ளார். கரோனாதடுப்புப் பணிகள் குறித்து ஆளுநரிடம் ஆறாவது முறையாக அறிக்கை சமர்ப்பிக்க இருக்கிறார்.
இந்தச் சந்திப்பில் அண்ணா பல்கலைக்கழகத்தைஇரண்டாகப் பிரிப்பது மற்றும் பெயர் மாற்றம் செய்வதுகுறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அமைச்சர்கள்கே.பி.அன்பழகன்,சி.வி. சண்முகம் ஆகியோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.அதேபோல்தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,டி.ஜி.பி திரிபாதியும்இந்த ஆலோசனையில் பங்கு பெற்றுள்ளனர்.