Skip to main content

3-ஆம் நாளாக 5 ஆயிரத்திற்கும் கீழ் கரோனா... -தமிழகத்தில் இன்றைய கரோனா நிலவரம்

Published on 14/10/2020 | Edited on 14/10/2020
CORONA

 

 

தமிழகத்தில் இன்றும் 3- ஆம் நாளாக 5 ஆயிரத்திற்கு குறைவாக  4,462 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,70,392 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 42,556 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

சென்னையில், கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,130 ஆக பதிவாகியுள்ளது. இதனால், சென்னையில் 21-வது நாளாக 1,000-க்கும் மேலாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,85,559 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் தமிழகத்தில் 93,844 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில், இன்று மேலும் 5,083 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,17,403 ஆக அதிகரித்துள்ளது. எனவே, கரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர்களைவிட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 52 பேர் இறந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 10,423 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 3,452 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அதேபோல் இன்று அதிகபட்சமாக கோவையில் 389 பேருக்கும், சேலத்தில் 274 பெருக்கும் ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்