Skip to main content

''செல்போனில் பேலன்ஸ் இல்லை...''-தங்கையை அரிவாளால் வெட்டிக்கொன்ற அக்காள் கைது!

Published on 15/03/2022 | Edited on 15/03/2022

 

Dindigul district

 

பேசுவதற்கு செல்போன் கொடுக்காததால் தங்கையை அக்காவே அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது நாககோனானூர். இக்கிராமத்தில் வசித்து வந்த பழனியம்மாள் என்ற மூதாட்டிக்கு வெங்கடேஸ்வரி, தமிழ்ச்செல்வி என்ற இரு மகள்கள் இருந்தனர். கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும் இருக்கிறார். பழனியம்மாளும் அவரது இரண்டு மகள்களும் ஒரே வீட்டில் இருந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி திண்டுக்கல்லில் வேறு ஒரு இடத்தில் தங்கியிருந்துள்ளார்.

 

இரண்டு மகள்களில் மூத்த மகளான வெங்கடேஸ்வரி கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தாய் பழனியம்மாள் வீட்டுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்பொழுது 'கோவையில் உள்ள தனது மகனுக்கு போனில் பேச வேண்டும் எனக்கு கொடு' என தங்கையான தமிழ்செல்வியிடம் செல்போனை கேட்டுள்ளார் வெங்கடேஸ்வரி. ஆனால் தமிழ்ச்செல்வி 'செல்போனில் பேலன்ஸ் இல்லை' எனக்கூறி செல்போனை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த வெங்கடேஸ்வரி வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வியை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். மேலும் செல்போன் தராததால் தமிழ்ச்செல்வியைக் கொலை செய்ததாக அம்மாவான பழனியம்மாளிடம் தெரிவித்துள்ளார். 'நீயும் என்னுடைய பேச்சை கேட்கவில்லை என்றால் உன்னையும் இதேபோல் கொன்று விடுவேன்' என்றும் மிரட்டியுள்ளார் வெங்கடேஸ்வரி.

 

இதனையடுத்து வெளியே வந்த பழனியம்மாள், தமிழ்ச்செல்வி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு கூச்சலிட்டார். இதுதொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி மகேஷ், ஆய்வாளர் பாலமுருகன் உயிரிழந்த தமிழ்ச்செல்வி உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் கொலையை நிகழ்த்திய வெங்கடேஸ்வரியை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், அதற்காக மருந்துகள் சாப்பிட்டு வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக மருந்து எடுத்துக் கொள்ளாததும் தெரியவந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.