டந்து முடிந்த தேர்தலை, பா.ஜ.க. தனது இந்துத்துவா தத்துவத்துக்கு தமிழக மக்கள் எவ்வளவு அங்கீகாரம் கொடுக்கிறார்கள் என்கிற அளவீடாக மட்டுமே பார்த்தது. அதனால்தான் தனித்துப் போட்டி, புதிய அணி என ஏகப்பட்ட இடர்பாடுகள் வந்தாலும் தேர்தலை சந்தித்தது. ஆனால், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை இந்தத் தேர்தலை 2026ல் நடக்கப்போகும் சட்டமன்றத் தேர்தலுக்கான பரிசோதனைக் களமாகவே பார்த்தார்கள்.

தேர்தல் தொடங்குவதற்கு முன்பு மா.செ.க் கள் கூட்டத்தில் ஸ்டாலின் இதை வலியுறுத்தினார். தமிழகத்தில் எந்தத் தொகுதியில் வாக்குகள் குறைந்தாலும் அந்தத் தொகுதியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். அத்துடன் சபரீசனின் ‘பென்’ என்கிற அமைப்பை வைத்து தமிழகம் முழுவதும் தொடர்ந்து கருத்துக் கணிப்புக்களை நடத்தினார். ‘பென்’ அமைப்பு கொடுக்கும் அறிக்கைகள் ஸ்டாலின் மூலம் ஒவ்வொரு பாராளுமன்றப் பொறுப்பாளருக்கும் தினமும் போய்ச்சேரும்.

எந்தத் தொகுதியில் சுணக்கம், எந்த நிர்வாகிகள் வேலை செய்யவில்லை, எங்கே பிரச்சாரம் சரியாகச் செல்லவில்லை என்பதை யெல்லாம் கணக்கிட்டு ‘பென்’ அமைப்பு கொடுக்கிற அறிக்கைக்கு தினமும் பொறுப்பாளர் கள் பதில் கொடுக்க வேண்டும். அந்த பதில் மறுபடியும் ‘பென்’ அமைப்புக்கு அனுப்பி வைக்கப்படும். இப்படி ஒவ்வொரு தொகுதியிலும் நடக்கும் மாற்றங்களை தி.மு.க. கண்காணித்து வந்தது. அ.தி.மு.க.வோ, முன்னாள் உளவுத்துறை உயரதிகாரி சத்தியமூர்த்தியின் உதவியுடன் தொகுதி நிலவரங்களை கேட்டுப் பெற்றது. ஆனால் இதையெல்லாம் மீறி தி.மு.க.வினர் செயல்பட்டார் கள் என்பதால் மந்திரிசபையை மாற்ற வேண்டும் என்கிற முடிவுக்கு முதல்வர் வந்திருப்பதாக தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

stalin

Advertisment

ஈரோடு தொகுதியில் வேட்பாளராக நின்ற வர், அந்த தொகுதியில் பொறுப்பாளராக இருந் தவர். இளைஞரணி நிர்வாகியான அவருக்கும் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சருக்கும் ஏழாம் பொருத்தம். அ.தி.மு.க. காசு கொடுத்து கடும் போட்டியை உருவாக்கிய அந்தத் தொகுதியில், வேட்பாளருக்கும் மந்திரிக்கும் இடையே நடந்த போட்டி தி.மு.க.வின் வெற்றியை பாதிக்கும் எனக் கணித்த தலைமை, உடனே தலையிட்டு பஞ்சா யத்து செய்தது. திருப்பூர் தொகுதியில் மா.செ. இரு அமைச்சர்களை உள்ளே விடவில்லை. இந்த மோதல் கடைசிவரை நீடித்தது. தலைமை பஞ்சா யத்து செய்தாலும் அது பெரிய மோதலாகவே தொடர, அந்த மோதலை அ.தி.மு.க. பயன்படுத்திக் கொண்டது.

பொள்ளாச்சியில் தி.மு.க. சுணக்கம் காட்ட, அதைப் பயன்படுத்தி அ.தி.மு.க. வேலுமணி முன்னேற்றம் காட்டினார். உடனே தி.மு.க. தலைமை, தலைமைக் கழக நிர்வாகியான பூச்சி முருகனை அனுப்பியது. அவர் அங்கே தி.மு.க.வை நிமிர்த்த பூத் கமிட்டிகளை நியமித்தார். அவரது செயல் வேகத்தைப் பார்த்த தலைமை, அப்படியே அவரை கோவைக்கு டிரான்ஸ்பர் செய்தது. கோவையில் களத்தில் இருந்த செந்தில் பாலாஜியின் கரூர் கேங், டி.ஆர்.பி.ராஜா, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோரைக் கடந்து பூச்சி முருகன் அங்கே தேர்தல் களப் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.

தேனி வேட்பாளருக்கு எதிராக தேவேந்திர குல வேளாளர்களும், கவுண்டர்களும் கச்சை கட்ட, அவர்களை சமாளிக்க ஏ.கே.எஸ்.விஜயன், கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோரை களத்தில் இறக்கியது தி.மு.க. தலைமை. நீலகிரியில் அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் மா.செ. முபாரக் மத்தியில் நடந்த கடும் மோதலை வேட்பாளர் ஆ.ராசா கண்டுகொள்ளவில்லை. முக்கோணப் போட்டி என்பதால் ராசா தப்பிக்கிறார். காஞ்சிபுரத்தில் மதுராந்தகம் உட்பட்ட தொகுதிகளை தி.மு.க. அமைச்சர் கண்டுகொள்ளவில்லை.

சென்னையில் எழும்பூர், வில்லிவாக்கம், மாதவரம் ஆகிய பகுதிகளை பொறுப்பில் இருந்த அமைச்சர் கண்டு கொள்ளவில்லை. மத்திய சென்னை தொகுதியில் வேட்பாளருக்கும், மாவட்ட அமைச்சருக்கும் இடையே பெரிய மோதலே நடந்திருக்கிறது. நெல்லை தொகுதியில் பொறுப்பாளராக இருந்த ஒரு அமைச்சர் பா.ஜ.க. வேட்பாளருடன் ஒத்துப்போக, நாடார் இனத்தைச் சேர்ந்த அனிதா ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டார்.

அரக்கோணம் தொகுதியில் மகாத்மாவான மந்திரிக்கும், உலகத்தைக் காக்கும் வேட்பாளருக்கும் இடையே கடும் மோதல். மந்திரி பற்றி வேட்பாளர் பக்கம் பக்கமாக புகார்க் கடிதம் கொடுத்திருக்கிறார். வேலூர் தொகுதியில் அமைச்சருக்கும் கட்சிக்காரர்களுக்கும் கடுமையான மோதல் நடந்தது. தர்மபுரியில் தி.மு.க. சோர்வாக இருக்க, அங்கே பா.ம.க. ஜெயிக்கும் என் கிற பிரச்சாரம் மேலெழுந்தது. உடனே களத்தில் குதித்த தலைமை, அங்கே தி.மு.க.வினரை தட்டிக்கொடுத்து களத்தில் இறக்கியது.

இப்படியாகத் தேர்தலில் ஒரு பெரிய அக்கினிப் பரிட்சையையே தி.மு.க. கடந்து வந்துள்ளது. இதில் ஒரு குறிப்பிட்ட சமுதாய அமைச்சர்கள், ஓ.பி.எஸ்.சுக்கும், டி.டி.வி.க்கும் ஆதரவாக இருந்ததை யும், தி.மு.க. தலைமை கணக்குப் போட்டு வைத்திருக்கிறது. தமிழ் நாடு முழுவதும் இந்தத் தேர்த லில் சாதி ரீதியாக ஒரு பிளவுப் போக்கு... அங்கங்கே தென்பட் டது. இதையெல்லாம் மீறி மோடி எதிர்ப்பு என்கிற ஒற்றை அஸ்திரத்தில் கட்சி யை ஒருங்கிணைத்துள்ளார் ஸ்டாலின் என்கிறார்கள் தி.மு.க.வினர்.