Skip to main content

'என்னை கடித்த பாம்பு  இதுதான்'-மருத்துவமனைக்கு பாம்புடன் வந்த வாலிபர்... மக்கள் அலறியடித்து ஓட்டம்!!

Published on 06/09/2020 | Edited on 06/09/2020
incident in ulunthurpettai

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் 29 வயது உள்ள அசோக். இவர் நேற்று முன்தினம் அதே அம்மன் கோயில் மரத்தடியில் அமர்ந்து நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மரத்திலிருந்து ஒரு பாம்பு தொப்பென்று அசோக் மீது விழுந்தது. அவர் மீது பாம்பு விழுந்ததைக் கண்டு அசோக் சுதாரிப்பதற்குள் அவரது கையில் கடித்து விட்டு ஓட்டம் எடுத்தது பாம்பு. 

கடித்த நிலையிலும் அசோக் பதட்டம் அடையாமல் ஓட்டமாக ஓடிச் சென்று கடித்து விட்டு ஓடிய அந்த பாம்பை லபக்கென்று கையில் பிடித்துக் கொண்டார். அந்த பாம்போடு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நடந்தே சென்றார். அங்கு சிகிச்சைக்காக வந்திருந்த புற நோயாளிகள்கையில் பாம்புடன் அசோக் வருவதைக் கண்டு மிரண்டு போய் அங்கிருந்து ஓட்டம் எடுத்தனர். அங்கிருந்த டாக்டர்களிடம் அசோக் கையில் கொண்டு வந்திருந்த பாம்பை காட்டி  என்னை கடித்த  பாம்பு  இதுதான் என்று கூறியுள்ளார். இதையடுத்து அங்கிருந்த டாக்டர்கள் பாம்பை அப்புறப்படுத்திவிட்டு அசோக்கிற்கு விஷ முரிவுதடுப்பு ஊசி போட்டு சிகிச்சையில் வைத்துள்ளனர்.

கடந்த மூன்று நாட்களாக சிகிச்சையில் உள்ளார் அசோக். அவரை கடித்த அந்தப் பாம்பு கொம்பேறி மூக்கன் என்று கண்டறியப்பட்டுள்ளது. மிகவும் துணிச்சலோடு தன்னைக் கடித்து விட்டு ஓடிய பாம்பை துரத்திச் சென்று பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த அசோக்கின் தைரியத்தைக் கண்டு பலரும்  பாராட்டுகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.