Skip to main content

பயணிகளின் தாகம் தணிக்கும் அரசு பேருந்து நடத்துனர்: பாராட்டிய அதிகாரிகள்!

Published on 27/05/2019 | Edited on 27/05/2019

ஒரு பேருந்து நிலையத்திலும் கூட பயணிகள் குடிக்க தண்ணீர் வைப்பதில்லை. ஆனால் ஒரு அரசு பேருந்து நடத்துனர் தன் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தினசரி 60 லிட்டர் தண்ணீரை குடிக்க கொடுகிறார். அவசரமாக பேருந்தில் ஏறும் பயணிகள் தாகம் வந்தாலும் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் தாகத்தில் அவதிப்படுவதை காண முடியும். ஆனால் மதுரை – தஞ்சை பேருந்தில் ஏறினால் அனைவருக்கும் தாகம் தணிக்க தண்ணீர் கொடுப்பார் அந்த நடத்துனர் என்கிறார்கள் பயணிகள். 

 

 The state bus conductor are thirsty for passengers


 

மதுரை போக்குவரத்துக் கழகத்தில் இருந்து மதுரை – தஞ்சை செல்லும் நீண்ட தூரப் பேருந்து புதுக்கோட்டை வழியாக செல்கிறது. அந்த பேருந்தில் பயணிகள் சுமார் 4 மணி நேரம் வரை தொடர்ந்து பயணிக்க வேண்டியுள்ளது. அவசரத்தில் தண்ணீர் எடுக்காமல் வரும் பயணிகள் அச்சப்பட தேவையில்லை. பயணிகளுக்கு பயணச் சீட்டு கொடுத்து முடித்த பிறகு தண்ணீர் பாட்டில்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பயணியிடமும் சென்று குடிக்க தண்ணீர் வேண்டுமா என்று கேட்கிறார் நடத்துனர். தாகத்தில் இருக்கும் பயணிகள் அவர் கொடுக்கும் தண்ணீரை வாங்கி குடிக்கின்றனர். பிறகு எப்ப யாருக்கு தாகம் எடுத்தாலும் தயங்காமல் கேளுங்க தண்ணீர இருக்கு என்று சொல்லிவிட்டு தனது இருக்கையில் அமர்கிறார்.


 

 The state bus conductor are thirsty for passengers

 

அந்த நடத்துனர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் திருஞானம்(45). அவரே சொல்லும் போது.. நீண்ட தூரம் பயணம் செல்லும் போது தாகம் எடுத்து தண்ணீர் கிடைக்காமல் நானே பலமுறை தவித்திருக்கிறேன். எல்லா பயணிகளும் தண்ணீர் கொண்டு வருவதில்லை. அதை நினைத்து தான் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நான் செல்லும் பேருந்தில் உள்ள பயணிகளுக்கு தாகம் தணிக்க குடிதண்ணீர் வழங்கி வருகிறேன். ஒரு நாளைக்கு சுமார் 60 லிட்டர் வரை தண்ணீர் கொடுக்கிறேன். ஒவ்வொரு இடத்திலும் நல்ல தண்ணீர் கிடைக்கும் இடங்களில் தண்ணீர் பாட்டில்களில் நிரப்பி வைத்துவிடுவேன். பிறகு பயணிகளுக்கு கொடுப்பது வழக்கம். நான் தண்ணீர் கொடுப்பதை பார்த்து பயணிகள் என்னிடம் அன்பாக பேசுவார்கள். பலரும் என்னை பாராட்டி செல்கிறார்கள் என்றார். பல பேர் என் செல்போன் எண் 9786754347 லும் பாராட்டு சொல்கிறார்கள் என்றார். 
 

 

பயணிகளின் தாகம் தணிக்கும் அரசு பேருந்து நடத்துனரின் செயலை பார்த்து புதுக்கோட்டை போக்குவரத்துக் கழக அதிகாரிகளும், வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் பலதுறை அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி பொன்னாடை அணிவித்தனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.