Skip to main content

மக்களை ஏமாளிகளாக கருதுகிறார் எடப்பாடி! மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன் தாக்கு!

Published on 03/08/2019 | Edited on 03/08/2019

தமிழக மக்களை ஏமாளிகளாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்க்கிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார். சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்தும், தனியாருக்கு விற்க கோரப்பட்டுள்ள ஒப்பந்தப்பணிகளை கைவிடக்கோரியும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. 

 

SALEM STEEL PLANT GOVERNMENT ACTIVITIES AGAINST AT SAIL EMPLOYEES MARXIST PARTY STRIKE



மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். போராட்டத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பாஜக அரசு ஜனநாயக ரீதியில் செயல்படாமல் தன்னிச்சையாக நாடாளுமன்றத்தில் சட்ட மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது. மக்களை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதால் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

 

SALEM STEEL PLANT GOVERNMENT ACTIVITIES AGAINST AT SAIL EMPLOYEES MARXIST PARTY STRIKE

 


முத்தலாக் சட்டம் நிறைவேற்றம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத மசோதாக்களை நிறைவேற்றியதை கண்டித்து வரும் 6ம் தேதி, கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முயற்சிகளை தடுக்க, அதிமுக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தங்களது ஆட்சியை தக்க வைத்தால் போதும் என்ற நிலையில் இருக்கிறார்கள். ஆட்சியை தக்க வைப்பதற்காக தமிழகத்தின் உரிமைகளையும், சொத்துகளையும் மத்திய அரசிடம் கொடுத்திட முதல்வர் எடப்பாடி பழனிசாமி தயாராக உள்ளார்.

 

 

SALEM STEEL PLANT GOVERNMENT ACTIVITIES AGAINST AT SAIL EMPLOYEES MARXIST PARTY STRIKE


தமிழக மக்களை ஏமாற்ற அதிமுக இரட்டை வேடம் போடுகிறது. முத்தலாக் மசோதா விவகாரத்தில் மக்களவையில் அரசுக்கு ஆதரவும், மாநிலங்களவையில் எதிர்ப்பும் தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளார்கள். தமிழக மக்களை ஏமாளிகளாக முதல்வர் எடப்பாடி பார்க்கிறார்கள். செயலற்ற நிர்வாகமாக இந்த ஆட்சி நடந்து வருகிறது. இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.  போராட்டத்தில் காங்கிரஸ், இ.கம்யூ., கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கான சத்துணவு முட்டைகள் குறைவு; ஆட்சியரின் உத்தரவால் பரபரப்பு

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Nutrient organizer suspended due to shortage of eggs in student rations

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி அரக்கோணம் அடுத்த கும்பினிபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு நடத்தினார். அப்போது பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு சாப்பாடு மற்றும் முட்டை வழங்குவதை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது 7 மாணவர்களுக்கு முட்டை கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து முட்டைகள் இருப்பு வைக்கும் அறை மற்றும் அரிசி, பருப்பு வைக்கும் அறையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் சத்துணவு முட்டைகள் போதுமான அளவு இருப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டது. இது குறித்து சத்துணவு அமைப்பாளர் மலர் என்பவரிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டதற்கு வேறு பள்ளியில் முட்டைகள் இறக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் பதிவேடுகளை முறையாக பராமரிக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சத்துணவு அமைப்பாளர் மலரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டார். மேலும் சத்துணவு அமைப்பாளர் மலர் பணியில் சேர்ந்த நாளிலிருந்து இதுநாள் வரை பதிவேடுகள் முறையாக பராமரித்துள்ளாரா? அந்த பதிவேடுகளில் ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால் அதற்கு உண்டான அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் அதிரடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

பிச்சவாரத்தில் படகு சவாரி ரத்து; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Boat ride canceled in Bichhiwara due to rain

 

சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இந்த சுற்றுலா மையத்தில் உள்ள சதுப்பு நில காடுகளுக்கு இடையே தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்கிறார்கள்.

 

இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டிசம்பர் 2 மற்றும் 3-ந் தேதி ஆகிய இரு தினங்களுக்கு பிச்சாவரம் படகு இல்லத்தில் பயணிகளுக்கு அனுமதி இல்லை என கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார். எனவே சுற்றுலாப் பயணிகள் பிச்சவாரத்திற்கு வந்து படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.