Skip to main content

''அப்போ கவர்மெண்ட் ஸ்கூல் சுகாதாரமா, நீட்டாவே இருக்கக் கூடாதா?''-கிராம சபை கூட்டத்தில் கண்ணீர் விட்ட தலைமை ஆசிரியை  

Published on 03/10/2022 | Edited on 03/10/2022

 

 "So the government school is hygienic, shouldn't it be long?" - the head teacher who broke down in tears at the village council meeting

 

கிராம சபை கூட்டத்தில் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஒருவர் பள்ளிக்கு அடிப்படை வசதிகளே இல்லை என கண்ணீர் விட்டு அழுதபடி பேசிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தை அடுத்துள்ளது சாலமரத்துப்பட்டி ஊராட்சி. அங்குள்ள ஓலைப்பட்டி எனும் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தில் ஓலைப்பட்டி நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய பெண் தலைமை ஆசிரியை, ''பள்ளியில் மீட்டர் பெட்டி போய்விட்டது. இரண்டு கட்டிடங்கள் இருக்கிறது ஒரு கட்டிடத்தில் தான் மீட்டர் பெட்டி உள்ளது. இன்னொரு கட்டிடத்தில் மீட்டர் பெட்டி இல்லை. அதனால் 50 மீட்டர் தூரத்திற்கு வயர் கனெக்ஷன் கொடுக்க வேண்டும். வயர் கனெக்ஷன் கொடுத்தாலும் ஆறு மாதம் முதல் ஒரு வருடத்திற்கு கூட தாங்குவது கிடையாது. குரங்கு பிச்சுப் போட்டுவிடுகிறது அல்லது ஏதாவது ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்துவிடுகிறது. இது போன்று  வயர் டேமேஜ் ஆனால் கட்டிடத்தில் எர்த் அடிக்கிறது. இதில் பசங்களுக்கு ஏதாவது ஆச்சு என்றால் யார் பதில் சொல்வார்கள். இது தொடர்பாக பிடிஓ ஆபிசுக்கு சென்று கடிதம் கொடுத்தேன். அதற்கு பிடிஓ சொன்னார் 'இதற்கு 25,000 ரூபாய் செலவாகும். இதெல்லாம் செய்ய முடியாதம்மா. நீங்க எடுத்துட்டு போயிட்டு நீங்கள் ஏதாவது வருமானம் வந்துச்சுன்னா பார்த்து செஞ்சுக்கோங்க' என்று. நாங்கள் என்ன கமிஷனா வாங்குறோம். அதிகாரிகளிடம் முறையிட்டால் கிராம சபை கூட்டத்தில் மனு கொடுக்க சொல்கிறார்கள். ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. 

 

சேதமடைந்த பள்ளி காம்பவுண்ட்டை ஜேசிபி வைத்து இடிக்க முடியாது மேனுவலாகதான் இடிக்க முடியும் என சொன்னார்கள். அந்த இடம் புல், புதர்கள், முள்ளு செடிகளாக இருக்கிறது. பாம்பு அந்த வழியாக ஜன்னலில் ஏறி வருகிறது. நான் என்ன செய்வது. எங்களுக்கு நல்ல காம்பவுண்ட் கட்டி தர வேண்டும் என்று கடிதம் கொடுத்தேன். அதுவும் நடக்கவில்லை. நான் வந்த உடனே பில்டிங் அழுக்காக இருக்கிறது, சுகாதாரமாக இல்லை என்பதற்காக ஐம்பதாயிரம் என் கை காசு செலவு செய்த செய்து பெயிண்டிங் செய்தேன். இப்பொழுது ஒரு பில்டிங்கிற்கு கமிஷனர் அம்மா பெயிண்ட் பண்ணி கொடுத்தாங்க. அதுவும் ஒரு கோட் தான் அடிப்போம் இரண்டு கோட் எலிஜிபிள் கிடையாது என்று சொல்லிவிட்டார்கள். அப்போ கவர்மெண்ட் ஸ்கூல் சுகாதாரமாக இருக்கக் கூடாதா? நீட்டாவே இருக்கக் கூடாதா? சாபக்கேடா கவர்ன்மென்ட் ஸ்கூல் என்றால். பேசாமல் விஆர்எஸ் கொடுத்துட்டு போயிடலாம்.  ஒவ்வொருத்தர்கிட்டயும் கெஞ்சிகிட்டு இருப்பதை விட'' என்று கண்ணீர் விட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்