Skip to main content

ரூ.8 லட்சம் கொள்ளை வழக்கில் சிக்கிய கொள்ளையர்கள் கைது...

Published on 23/09/2020 | Edited on 23/09/2020

 

Robbers arrested in Rs 8 lakh robbery case
மாதிரி படம்

 

 

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகிலுள்ளது திருவக்கரை. இங்குள்ள சந்திரமவுலீஸ்வரர் தெருவைச் சேர்ந்தவர் பழனி கல்லுடைக்கும் ப்ளூ மெட்டல் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் கடந்த 29ம் தேதி இரவு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் தூங்கி கொண்டிருந்த அவரது மகனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி விட்டு பீரோவில் இருந்த ரூ.8 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். 

 

இதுகுறித்து பழனி அளித்த புகாரின்பேரில் வானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கோட்டக்குப்பம் டி.எஸ்.பி அஜய் தங்கம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் அடங்கிய போலீஸ் தனிப்படை கொள்ளையர்களைத் தேடிவந்தனர். நேற்று முன்தினம் போலீசார் செங்கமேடு என்ற பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக இரு பைக்குகளில் வந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். 

 

அவர்கள் திருக்கனூர் அடுத்துள்ள சோரப்பட்டு கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகன் கார்மேகம் வயது 19, மோகன் மகன் அருளரசன் வயது 19, அண்ணாமலை மகன் அப்பு என்கிற செந்தில்குமார் வயது 19, செட்டிபட்டு கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் முரளி வயது 27 என்பது தெரியவந்தது. இதில் தமிழ்வாணன் தலைமையில் 6 பேர் சேர்ந்து பழனி வீட்டில் கொள்ளை அடித்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். 

 

இந்த கொலை வழக்கில் சிக்கியுள்ள முரளி என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனியிடம் கார் டிரைவராக வேலை செய்து பின் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளார். பழனி வீட்டில்  பணி செய்தபோது, அவரது வீடில் பணப்புழக்கம் இருப்பதை அறிந்த முரளி இந்த கொள்ளைக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். மேலும் கொள்ளை மற்றும் வழிப்பறியில் ஈடுபடும்போது தாக்குவதற்காக 3 நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்தனர். அவைகளை கைப்பற்றிய போலீசார் மேலும் அவர்களிடம் இருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடித்த பணத்தில் வாங்கிய செல்போன்கள் தங்க நகைகள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்களின் கூட்டாளி தலைமறைவாக உள்ள சுரேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். கைதுசெய்யப்பட்ட நால்வரையும் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.