Skip to main content

உரிமைக்குழு கூட்டம்:மூன்று எம்.எல்.ஏக்கள் வரவில்லை

Published on 28/08/2017 | Edited on 28/08/2017

உரிமைக்குழு கூட்டம்:மூன்று எம்.எல்.ஏக்கள் வரவில்லை

சட்டப்பேரவையில் கூடிய உரிமைக்குழு கூட்டத்தில் மூன்று எம்.எல்.ஏக்கள் வரவில்லை.

தமிழக சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த ஜூன் மாதம் 14ல் தொடங்கி ஜூலை -19 தேதி வரை நடந்தது. கடைசி நாள் கூட்டத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் சென்னையில் தடை செய்யப்பட்ட குட்கா தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது என்று குற்றம் சாட்டினார். அதோடு தான் கொண்டு வந்த தடை செய்யப்பட்ட குட்காவையும் எடுத்து காட்டினார். இதைத் தொடர்ந்து அவைக்கு தடை செய்யப்பட்ட பொருளை கொண்டு வந்ததாக சபாநாயகர் தனபால் புகார் தெரிவித்தார். தொடர்ந்து இந்த பிரச்னை உரிமைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.

இந்த பிரச்னை குறித்து விவாதிக்க உரிமைக்குழு கூட்டம் இன்று( 28ம் தேதி) மாலை 5 மணிக்கு கூடியது. அவை உரிமை குழு தலைவர் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. 

இந்த  உரிமைக்குழு கூட்டத்திற்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஏழுமலை, தங்கதுரை, எஸ்.டி.கே.ஜக்கையன், ஆகிய 3 பேரும்  வரவில்லை.


சார்ந்த செய்திகள்