Skip to main content

கர்ப்பமான சிறுமி: காரணமான வாலிபரைத் தேடும் பணியில் போலீஸ்! 

Published on 31/01/2022 | Edited on 31/01/2022

 

Pregnant girl: Police on a mission to find the culprit

 

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் சரிவர இயங்காததால் சிறுமியும் அவரது அண்ணனும் அவரது பாட்டி வீட்டில் தங்கி ஆன்லைன் மூலம் படித்து வந்துள்ளனர். ஆவினங்குடி அருகே உள்ளது தொளார் கிராமத்தைச் சேர்ந்தவர் 21 வயது வாலிபர் வல்லரசு. இவருக்கும் அந்த சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 15.7.2021 ஆம் தேதி வல்லரசு அந்த சிறுமியை வீட்டை விட்டு அழைத்துச் சென்றுள்ளார்.

 

அப்படி சென்றவர்கள் ஒரு கோயிலில் வைத்து அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டு மீண்டும் அந்த சிறுமியின் பாட்டி வீட்டிற்கு வந்து இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்துள்ளனர். இந்த நிலையில் அந்த சிறுமி 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதனால் அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தொளார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிறுமியை அழைத்துச் சென்று பரிசோதனை செய்தவர்களுக்கு  சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

 

சிறு வயது பெண் எப்படி கர்ப்பமானார் என்று சந்தேகம் சுகாதார துறையினருக்கு ஏற்பட்டதால் ஆவினங்குடி காவல்நிலையத்திற்கும், மாவட்ட சமூக நல அலுவலருக்கும் தகவல் அளித்துள்ளனர். அவர்களது தகவலின் பேரில் மாவட்ட சமூக நல அலுவலர் விசாரணை செய்துள்ளார். அவரது புகாரின் பேரில் கடந்த 27ஆம் தேதி வல்லரசுவிடமிருந்து அந்த சிறுமியை மீட்டு கடலூர் சிறுமிகள் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வல்லரசு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகிறார்கள். சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவாக உள்ள இளைஞர் குறித்த தகவல் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வீட்டில் சொல்வதற்கு ஒரு மாதிரியா இருக்கு'-தலைகுனிய வைத்த சிறுமிகளின் வைரல் வீடியோ!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
shocking video of school girls

திருப்பூரில் பள்ளி கழிவறையைப் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை வைத்து சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள குமாரபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியரான இளமதி ஈஸ்வரி உள்ளார். இந்நிலையில் பள்ளியில் பயின்று வந்த இரண்டு பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை வைத்து பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ளார் தலைமை ஆசிரியரான இளமதி ஈஸ்வரி. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி மாணவிகள் பேசும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இது தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் வருவாய் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தாராபுரம் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர். இதில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை நிர்பந்தித்து கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு உடந்தையாக  அறிவியல் ஆசிரியை சித்ராவும் இருந்ததாக கூறப்படுகிறது.

அந்தச் சிறுமிகள்  பேசி வெளியிடப்பட்ட வீடியோவில், 'யார் ஸ்கூல் பாத்ரூமை சுத்தம் செய்தது; நாங்க ரெண்டு பேரும்தான் பண்ணுவோம். யார் உங்களை பண்ண சொல்வது; எச்.எம் மிஸ், சயின்ஸ் மிஸ். நீங்கள் கழுவ மாட்டேன் எனச் சொல்ல வேண்டியது தானே; சொன்னா திட்டுவாங்க. எதிர்த்தா பேசுறனு குச்சியை எடுத்து வெளுப்பாங்க.  உங்கள் வீட்டில் சொல்ல வேண்டியது தானே; வீட்டில் சொல்வதற்கு ஒரு மாதிரியா இருக்கு' எனப் பேசும் அந்த வீடியோ மேலும் வைரலாகி வருகிறது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.