Skip to main content

திருநங்கைகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய இணை ஆணையர்!

Published on 25/09/2020 | Edited on 25/09/2020

 

Assistant Commissioner conducts awareness program for transgender people!

 

 

புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பில் முப்பதுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகிறார்கள். திருநங்கைகள் மூலம் பல குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் இணை ஆணையர் பாலகிருஷ்ணன் திருநங்கைகள் அனைவரையும் அழைத்து  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார்.

 

இந்த விழிப்புணர்வு மூலமாக சுனாமி குடியிருப்பில் குற்றச்செயல்கள் குறைவதற்கு நாங்கள் சில முக்கிய நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம். இதில் உங்களுடைய பங்கும் எங்களுக்கு தேவைப்படுகிறது.  குற்றச்செயல்கள் போன்ற  எந்த தவறையும் உடனடியாக  காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதேபோல உங்களுக்கு எந்த உதவி என்றாலும் எந்த நேரத்திலும் என்னை அழைக்கலாம். உங்களுக்கு உதவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். என்று தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் புடவை, மளிகை பொருட்கள் ஆகியவற்றை வழங்கி சிறப்பித்தனர்.

 

அப்போது  துணை ஆணையர் சுப்புலட்சுமி, திருவொற்றியூர் உதவி ஆணையர் ஆனந்தகுமார் மற்றும் ஆய்வாளர் கோவிந்தராஜன் குற்றப்பிரிவு ஆய்வாளர் புவனேஸ்வரி திருவொற்றியூர் ஆய்வாளர் ஆரோக்கியராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

தவறி விழுந்த தச்சு தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tragedy of the fallen carpenter

தஞ்சை சிங்கபெருமாள்குளம் மெயின் ரோடு ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 49). தச்சு தொழிலாளி. இவரது மனைவி ஹேமா (வயது 44). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ராஜேந்திரன் திருவரங்கம் மாம்பழ சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் வேலையின் போது தவறி கீழே விழுந்தார். இதில் காயப்பட்ட அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.