Skip to main content

டிடிவி தினகரன் அணியினர் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு..!

Published on 03/03/2018 | Edited on 03/03/2018
police station


"அ.தி.மு.க. கரை வேஷ்டியை மாற்று அணியினர் யார் உடுத்தினாலும், அவர்களது வேஷ்டியை உருவுங்கள்" என சமீபத்தில் ராமநாதபுரத்தில் ஜெ.பிறந்தநாள் பொதுக்கூட்டத்தின் போது தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன் கூறியிருந்தார். 

இதற்கு பதிலளிக்கும் வகையில், டிடிவி தினகரன் அணியினர் "முடிந்தால் உருவி பாருங்கள்" என்று கூறினர். மேலும் அமைச்சர் மணிகண்டனின் வீட்டை முற்றுகையிட தயாராக இருந்தனர். இதையடுத்து போலீசாரின் தலையீட்டால் முற்றுகை தடுத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், டிடிவி அணியினரின் ஆதரவாளர்களான முன்னாள் கவுன்சிலர் தவமுனியசாமி மற்றும் கமல் ஆகியோரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

இதனைக் கண்டித்து அமைச்சர் மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டி டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்